திருப்பாவை 17
Page 1 of 1
திருப்பாவை 17
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்!
அம்பர மூடறுந் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
பொருள்....உடுக்கும் உடையும், குடிக்கும் நீரும் உண்ணும் உணவும் கேட்பவர்களின் மனம் நிறையும் படி கொடுத்து அருளும் எம்பெருமானே! உயர்ந்த மனம் கொண்ட நத்த கோபாலா! நீ தூக்கம் கலைந்து எழுவாயாக! பெண்களுக்க கொழுந்து போன்று விளங்குபவளே எங்கள் தலைவியாகிய யசோதை தாயே! எழுந்தருள்வாயாக வாமன அவதாரத்தில் இரு அடிதாரத்தில் இரு அடிகளால் மண்ணுலகையும், விண்ணுலகையும் அளந்த ஸ்ரீமன் நாராயணா நீ தூக்கம் கலைந்து எழுவாயாக சிவந்த நிறப் பொன்னால் செய்யப்பட்ட வீரக்சுழல் அணிந்த பலராமனே நீயும் உன் தம்பி கிருஷ்ணனும் துயில் எழுந்து எங்களை காத்தருள வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum