கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில்
Page 1 of 1
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில்
ஸ்தல வரலாறு....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கடந்த 1989ம் ஆண்டு பிப்.10ந்தேதி மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அப்போதிருந்தே கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் மத்தியில் செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டுமென்ற ஆசையும், ஆவலும் மேலோங்கியிருந்தது. இதன் விளைவாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுர திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2000ல் இதற்கான வேலைகள் துவங்கியது.
தொடர்ந்து அரசு மானியம் சுமார் 10 லட்சம் உள்பட 142 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அஸ்திவாரம், இரண்டடுக்கு கல்காரம், உபயதாரர்கள் வழியாக கட்டப்பட்ட ஏழு நிலைகளுடன் 91 அடி உயரத்தில் கம்பீரமான ராஜகோபுரம் எழுப்பப்பட்டது, இதையடுத்து சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஜனவரி 29ந்தேதி மஹாகும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடை பெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிக்கும்.
தீராப்பிணி தீர்த்து சகல செல்வங்களுக்கும் தரும் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகான பெண்கள் அம்மனை வழிபட்டு-வளையல்கள், மஞ்சள், குங்குமப்பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கடந்த 1989ம் ஆண்டு பிப்.10ந்தேதி மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அப்போதிருந்தே கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் மத்தியில் செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டுமென்ற ஆசையும், ஆவலும் மேலோங்கியிருந்தது. இதன் விளைவாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுர திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2000ல் இதற்கான வேலைகள் துவங்கியது.
தொடர்ந்து அரசு மானியம் சுமார் 10 லட்சம் உள்பட 142 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அஸ்திவாரம், இரண்டடுக்கு கல்காரம், உபயதாரர்கள் வழியாக கட்டப்பட்ட ஏழு நிலைகளுடன் 91 அடி உயரத்தில் கம்பீரமான ராஜகோபுரம் எழுப்பப்பட்டது, இதையடுத்து சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஜனவரி 29ந்தேதி மஹாகும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடை பெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிக்கும்.
தீராப்பிணி தீர்த்து சகல செல்வங்களுக்கும் தரும் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகான பெண்கள் அம்மனை வழிபட்டு-வளையல்கள், மஞ்சள், குங்குமப்பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» திருக்கோஷ்டியூர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum