தொண்டு நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி:
Page 1 of 1
தொண்டு நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி:
உப்பிலியபுரம் அருகே தொண்டு நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்த கணவன்–மனைவியை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொண்டு நிறுவனம்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வம்(வயது 35). இவரது மனைவி சுமதி(30). கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து ‘பீம்’ என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனத்தை கோட்டப்பாளையத்தில் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் சுமார் 2 ஆயிரம் பேரை உறுப்பினராக சேர்த்து நிறுவனத்தின் அடையாள அட்டை வழங்கி அதன் மூலம் அவர்களுக்கு அரசு நிதி உதவி, வங்கி கடன்பெற்றுத் தருவதாக கூறி பொது மக்களிடம் தலா ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என ரூ.30 லட்சம் வரை வசூல் செய்து உள்ளார்.
சுற்றி வளைத்து பிடித்தனர்
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இதுவரையில் அவர்களுக்கு எந்த உதவியும் பெற்று தரவில்லை என்று தெரிகிறது. மேலும் கடந்த சில தினங்களாக தொண்டு நிறுவன அலுவலகம் பூட்டியே கிடந்ததால் பொது மக்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் நிறுவன உரிமையாளரை தேடி வந்தனர். இந்த நிலையியில் நேற்று துறையூர் கடைவீதியில் கணவன்–மனைவி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்து அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புகார்கள் குவிந்தன
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் அருணா, இளம்வழுதி மனைவி ராதிகா, மற்றும் தனலட்சுமி ஆகியோர் தங்கள் பகுதியில் தங்களுடன் சேர்த்து 30 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி புகார் அளித்தனர். இந்த புகார்களின் பேரில் துறையூர் போலீசார் செல்வம், சுமதி மற்றும் புகார்தாரர்களை விசாரணைக்காக திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அழைத்து சென்றனர்.
தொண்டு நிறுவனம்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வம்(வயது 35). இவரது மனைவி சுமதி(30). கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து ‘பீம்’ என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனத்தை கோட்டப்பாளையத்தில் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் சுமார் 2 ஆயிரம் பேரை உறுப்பினராக சேர்த்து நிறுவனத்தின் அடையாள அட்டை வழங்கி அதன் மூலம் அவர்களுக்கு அரசு நிதி உதவி, வங்கி கடன்பெற்றுத் தருவதாக கூறி பொது மக்களிடம் தலா ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என ரூ.30 லட்சம் வரை வசூல் செய்து உள்ளார்.
சுற்றி வளைத்து பிடித்தனர்
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இதுவரையில் அவர்களுக்கு எந்த உதவியும் பெற்று தரவில்லை என்று தெரிகிறது. மேலும் கடந்த சில தினங்களாக தொண்டு நிறுவன அலுவலகம் பூட்டியே கிடந்ததால் பொது மக்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் நிறுவன உரிமையாளரை தேடி வந்தனர். இந்த நிலையியில் நேற்று துறையூர் கடைவீதியில் கணவன்–மனைவி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்து அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புகார்கள் குவிந்தன
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் அருணா, இளம்வழுதி மனைவி ராதிகா, மற்றும் தனலட்சுமி ஆகியோர் தங்கள் பகுதியில் தங்களுடன் சேர்த்து 30 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி புகார் அளித்தனர். இந்த புகார்களின் பேரில் துறையூர் போலீசார் செல்வம், சுமதி மற்றும் புகார்தாரர்களை விசாரணைக்காக திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அழைத்து சென்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நயன்தாரா மேனேஜர் – பிஆர்ஓ நீக்கம் – பல லட்சம் மோசடி?
» நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்
» வீட்டை வாங்கிக்கொண்டு ஏமாற்றினார்: நடிகர் சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
» நினைத்ததை நடத்தி வைப்பாள் மாரியம்மன்
» நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்
» வீட்டை வாங்கிக்கொண்டு ஏமாற்றினார்: நடிகர் சந்தானம் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
» நினைத்ததை நடத்தி வைப்பாள் மாரியம்மன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum