தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது

Go down

கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது Empty கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது

Post  ishwarya Sat May 04, 2013 2:15 pm

கண்ணா லட்டு தின்ன ஆசையா”, “ஒன்பல குரு” படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். ஏற்கனவே “ஆனந்த தொல்லை”, “லத்திகா” படங்களில் நடித்து இருந்தார். ஆனால் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். பல புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்குகள் உள்பட பல மோசடி வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. திருச்செங்கோடு தொழில் அதிபர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதே போல் மதுரையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ரூ.9 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் பலமுறை கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 8-ந்தேதி பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதனால் அவர் மீதான பிடிவாரண்டு ரத்தானது. இந்த நிலையில் புதிதாக ஒரு மோசடி புகாரில் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ரங்கநாதன் (வயது 60). இவர் தனது தொழில் அபிவிருத்திக்காக பலரிடம் கடன் கேட்டு இருந்தார். அப்போது 2 ஏஜெண்டுகள் அவரை சந்தித்தனர். ஒரு ஏஜெண்டு சென்னையைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர்கள் தங்களுக்கு தெரிந்த நபர் ஒருவரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறினார்கள். அதன் பேரில் இருவரும் பவர் ஸ்டார் சீனிவாசனை ரங்கநாதனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

ரூ.20 கோடி கடன் வாங்கித் தருவதாகவும் தனக்கு ரூ.50 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் கேட்டார். அதற்கு ரங்கநாதன் சம்மதித்தார். அதன்படி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு இதற்கான ஒப்பந்த பத்திரத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. சொன்னபடி பல மாதங்கள் ஆகியும் கடன் வாங்கித் தரவில்லை. கமிஷன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதுடன் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இது பற்றி குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார். இன்று அதிகாலை சென்னை சாலி கிராமம் அருகே பவர் ஸ்டார் சீனிவாசனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி), 120 (பி) (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் இதுபோல் மேலும் பலரிடம் மோசடி செய்து ஏமாற்றியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும், கவர்ச்சியான உறுதிமொழியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
»  மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
» 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மேலும் 3 வழக்குகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum