தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாடிப்பட்டி அருகே திருமணமான

Go down

வாடிப்பட்டி அருகே திருமணமான  Empty வாடிப்பட்டி அருகே திருமணமான

Post  meenu Tue Mar 26, 2013 5:41 pm

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருமணம்

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள மஞ்சள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரேமா (வயது 20)வுக்கும் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை ராமராஜபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஞ்சித் ஜே.சி.பி.ஆபரேட்டராக உள்ளார்.

இந்த நிலையில் பிரேமா கர்ப்பிணியானார். அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று பிரேமா திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரேமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணமாகி 6 மாதத்துக்குள் அவர் இறந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் மாலை 4.15 மணியாகியும் ஆர்.டி.ஓ.வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வாடிப்பட்டி சப்–இன்ஸ்பெக்டர் சகாயராஜ் உள்பட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் ஆர்.டி.ஓ.ஆறுமுகமும் வந்து விட்டார். இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum