தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அய்யனார் கோயில் - வாடிப்பட்டி

Go down

அய்யனார் கோயில் - வாடிப்பட்டி Empty அய்யனார் கோயில் - வாடிப்பட்டி

Post  birundha Fri Mar 29, 2013 10:44 pm

ஸ்தல வரலாறு....

சாஸ்தாவின் அவதாரம் என்று கூறப்படும் அய்யனார், வாடிப்பட்டியில் அருள் செய்கிறார். இவர் முதலில் காட்சி தந்தது கவுசிக வம்சத்தை சேர்ந்த பிருத்யும்ய ராஜாவுக்குத்தான். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை குலசேகர பாண்டியன் ஆட்சி செய்த போது இந்தக் கோயில் கட்டப்பட்டது.

அப்போது மதுரையின் மேற்கு எல்லையாக இருந்த வாடிப்பட்டியில் தனது படைப்பிரிவு ஒன்றை மன்னர் நிறுத்தியிருந்தார். அந்த படைக்குத் தளபதியாக இருந்தவர் முதுகுளத்தூரை சேர்ந்த மகாபத்மராஜன். இவர் தலைமையில் மேட்டுநீரேத்தான் என்ற இடத்தில் படையினர் தங்கியிருந்தனர். அங்கு நான்கு கோட்டைகள் இருந்தன. இவர்கள் தங்கள் வழிபாட்டிற்காக நீரேத்தான் கண்மாய்க் கரையில் அய்யனார் கோயிலை நிர்மாணித்தனர்.

காலப்போக்கில் அய்யனார் கோயில் சிதைந்தது. தற்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது. மேலும் 21 பந்தி தெய்வங்கள், 63 துணை தெய்வங்களின் சிலைகள் அமைய உள்ளன. மகாபத்மராஜன் வழி வந்தவர்களும், ஆந்திராவில் இருந்து வந்தவர்களும் அய்யனாரையும், சோணை சுவாமியையும் தங்கள் இஷ்ட தெய்வங்களாக வணங்கி வருகின்றனர்.

புரட்டாசி மாதம் இரு பிரிவினரும் இணைந்து 2 நாட்கள் விழா நடத்தி வருகின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum