தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடையில் மின்சார பற்றாக்குறையை போக்க வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க போர்க்கால நடவடிக்கை மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்

Go down

கோடையில் மின்சார பற்றாக்குறையை போக்க வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க போர்க்கால நடவடிக்கை மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்  Empty கோடையில் மின்சார பற்றாக்குறையை போக்க வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க போர்க்கால நடவடிக்கை மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்

Post  meenu Tue Mar 26, 2013 5:04 pm



தமிழகத்தில் கோடையில் மின்சார பற்றாக்குறையை போக்க வடமாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கான போர்க்கால நடவடிக்கையில் மின்சார வாரியம் இறங்கி உள்ளது.

கோடையில் மின்பற்றாக்குறை

தமிழகத்துக்கு தேவைப்படும் மின்சாரம் அனல்மின் நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் பெறப்பட்டு மின் நுகர்வோர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.சராசரியாக ஒரு நாளைக்கு 12 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. தேவையான மின்சாரம் மேற்கண்ட வழிகளில் போதுமானதாக கிடைக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மின்உற்பத்தி குறைவு

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–தமிழகத்தில் புதிய குடியிருப்புகள் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக கடந்த பத்தாண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் புதிய மின்திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காற்றாலைகளால் நேற்று மின்சார உற்பத்தி செய்யப்படவில்லை.மத்திய தொகுப்பிலிருந்து பெறும் மின்சாரத்தின் அளவும் நேற்று சுமார் ஆயிரம் மெகாவாட் வரை குறைவாக கிடைக்கப்பெற்றது. இதனால் மொத்த மின்உற்பத்தியின் அளவு 8,888 மெகாவாட் என்ற அளவில் குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வருவதற்கு முன்பாகவே மின்உற்பத்தி குறைந்து வரும் சூழலில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை போக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்தப்புள்ளி

மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக முதல்–அமைச்சரின் உத்தரவை ஏற்று வடமாநிலங்களிலிருந்து எங்கிருந்து, எப்போது, எவ்வளவு மின்சாரம் வாங்குவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதில் ஒரு சில இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய அரசின் பாராமுகம் ஒருபுறம் இருந்தாலும், வடமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதற்கான ஒரு சில ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்நிறுத்தம்

தமிழகத்தில் மின்சார தேவையை விட உற்பத்தி குறைவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு ஓரளவு நிலமை சரி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மின்நிறுத்த நேரம் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் பெரும்பாலான புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரஇருப்பதால் 4,500 மெகாவாட் வரை கூடுதல் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக புதிய திட்டங்கள் விரைவுபடுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் பணியும் நடந்து வருகிறது. தேசிய சூரிய சக்தி கொள்கை மூலம் சுமார் ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

ராஜஸ்தான், ஒடிசா

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திலிருந்து 2014 மே மாதம் வரை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் முறையான அனுமதியை அளித்துள்ளது. 1,000 யூனிட் என்ற அளவு இல்லாமல், மின்பாதையின் நிலமையை கருத்தில் கொண்டும், தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் வாங்கப்பட உள்ளது. அதுவும் ஒரு யூனிட் ரூ.5க்கு வாங்கி கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. ராஜஸ்தான், மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களிலிருந்து வாங்க வாய்ப்பு உள்ளது.அத்துடன் தனியார் மின்உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பாக மின்சந்தையிலும் ஒப்பந்தங்களும் போடப்பட்டு வருகிறது. அத்துடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் கருவிகள் மானிய விலையில் வாங்கி மின்நுகர்வோர்களுக்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கிடையில் தற்போது மின்நிலையங்களில் மின்சார உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் ஷூட்டிங் – ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல்
» பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
» பிப்ரவரியில், இலக்கை விட மின்சார
»  வடகொரியா மிரட்டல் எதிரொலியாக பதுங்கு குழிகளை தகர்க்கும் நீண்ட தூரம் ஏவுகணைகளை வாங்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை வாங்கப்படும் என தெரிகிறது. போர் மூளும் பதற்றம் கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா நாட்டு ராணுவ
» மின்சார விளக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum