தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்

Go down

தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந் Empty தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்

Post  meenu Sun Mar 24, 2013 1:21 pm


தட்சிணாய காலத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடிமாத அமாவாசை பிதுர்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றது.

ஆடி அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும், உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும், பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும், இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள் கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும், பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை, நந்திக் கூட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலை களில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.

நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும், கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. கோவிலில் ஆடி அமாவாசை அன்று மூதாதையர் களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது.

அப்போது மூங்கில் தட்டில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச்சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம், சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

பிறகு பூஜை செய்யப்பட்ட அந்த தட்டினை வயதான ஒரு அந்தனரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடை தானமும் செய்கிறார்கள்.

தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற இடம் தான்.*
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
» எந்த ராசிக்காரர்கள் எந்தக்கிழமையில் பசு தானம் செய்ய வேண்டும்?
» ஸ்கிப்பிங் தானே என எண்ணி அலட்சிய படாமல் ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்
» ஸ்கிப்பிங் தானே என எண்ணி அலட்சிய படாமல் ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்
»  எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum