தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது

Go down

விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது Empty விஸ்வரூபம் படத்துக்கு தடை நீங்கியது

Post  ishwarya Sat Mar 23, 2013 12:05 pm



நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 29) இரவு 10 மணிக்கு நீதிபதி கே.வெங்கட்ராமன் பிறப்பித்தார்.

இதன் மூலம் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான தடை நீங்கியுள்ளது. தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் மேல் முறையீடு செய்ய வசதியாக விஸ்வரூபம் படத்தை புதன்கிழமை (ஜனவரி 30) காலை 10.30 மணி வரை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் நீதிபதி வெங்கட்ராமன் நிராகரித்தார்.

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையும் (ஜனவரி 29) தொடர்ந்து நடைபெற்றது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன், மாநில அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன், திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி. வில்சன், இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் வழக்குரைஞர் ஆர். சங்கரசுப்பு உள்ளிட்டோர் ஆஜராகி சுமார் ஆறரை மணி நேரம் வாதிட்டனர்.

காலை சுமார் 11.45 மணிக்கு வாதம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்த வாதம் மாலை 6 மணி வரை நீடித்து முடிவடைந்தது. இதையடுத்து இரவு 10 மணிக்கு உத்தரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தடை ஏன்? விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து சென்னையில் மாநகர காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்களும் இரண்டு வார காலத்துக்கு படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 24-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நீதிபதி வெங்கட்ராமன் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 26) விஸ்வரூபம் திரைப்படத்தைப் பார்த்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை (ஜனவரி 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வுக்கு முயற்சிக்குமாறு நீதிபதி வெங்கட்ராமன் அறிவுறுத்தி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜனவரி 29) ஒத்திவைத்தார்.

தவறான சித்திரிப்பு இல்லை: வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் வாதிட்டதாவது: ""இந்தப் படத்தில் இந்திய முஸ்லிம்கள் குறித்து எதுவுமே கூறப்படவில்லை. படத்தில் இந்திய முஸ்லிமாக கதாநாயகன் கமல்ஹாசன் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

அவரது பாத்திரம் நல்ல விதமாகத்தான் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே "ஒரே ஒரு கிராமத்திலே, "டாவின்ஸி கோடு' போன்ற படங்களுக்கு தடை விதிக்கப்பட்டபோது, திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்த படங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்.

முறைகேடு நடைபெற்றுள்ளது: தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டதாவது: ""ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. விஸ்வரூபம் படத்தைத் திரையிட்டால் தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என உளவுத் துறை அளித்த தகவல் காரணமாக தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது'' என்றார்.

முறைகேடு இல்லை: மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் வாதிடும்போது, "விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு திரைப்பட தணிக்கை வாரியம் கூறியதன் அடிப்படையில், காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே இந்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது' என்றார்.

தடை சரிதான்: இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கரசுப்பு வாதிட்டதாவது: ""இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியைத் தவிர ஒட்டுமொத்த திரைப்படம் முழுவதும் இஸ்லாமிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. எனவே இந்தப் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடை சரியானதுதான்'' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum