கமலுடன் பணியாற்ற கொடுத்து வைத்திருக்கிறேன் : ஜெய்தீப்
Page 1 of 1
கமலுடன் பணியாற்ற கொடுத்து வைத்திருக்கிறேன் : ஜெய்தீப்
பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஷ்லாவத் விஸ்வரூபத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் ஆக்ரோஷ் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி அவரே மனம் திறக்கிறார். நான் ஆக்ரோஷில் நடித்து முடித்ததும், சிட்டகாங், கேங்ஸ் ஆப் வாசிப்பூர் படங்களில் நடித்து வந்தேன். அப்போது, ஹிந்தி விஸ்வரூபம் படத்தின் வசனகர்த்தாவான அதுல் திவாரி, கமல் சாரிடம் என்னைப் பற்றி சொல்லி இருக்கிறார்.
ஒரு நாள் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் யாரோ என்னிடம் விளையாடுகிறார்கள என்றுதான முதலில் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே கமல் சார்தான் கூப்பிடுகிறார் என்று தெரிந்ததுமே உடனே பிளைட் பிடித்து சென்னைக்கு வந்து கமல் சாரைப் பார்த்தேன். அவ்வளவுப் பெரிய நடிகரை நான் நேரில் பார்ப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அவரது உதவியுடன் நான் விஸ்வரூபம் படத்தில் நடித்தேன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அப்படத்தில் எனது கதாப்பாத்திரத்துக்கான 20 நிமிட டயலாக்கை கமல் சாரே அவரது குரலில் பேசி அதனை பதிவு செய்து எனக்காக மும்பைக்கு அனுப்பி வைத்திருந்தார். அதனை ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கேட்டு மனப்பாடம் செய்து படப்பிடிப்பின் போது டயலாக் பேசினேன். இதனை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது.
கமல் சாருடன் நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன் என்கிறார் பூரிப்போடு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலுடன் கவிதை வாசித்த த்ரிஷா!
» புது இயக்குனர்களுடன் பணியாற்ற மறுப்பது ஏன்?
» கமலுடன் ரஜினி பேச்சு
» கமலுடன் நடிக்கும் ஸ்ருதி
» கமலுடன் ஜோடி சேர ஆசை: ரீமாசென் ஏக்கம்
» புது இயக்குனர்களுடன் பணியாற்ற மறுப்பது ஏன்?
» கமலுடன் ரஜினி பேச்சு
» கமலுடன் நடிக்கும் ஸ்ருதி
» கமலுடன் ஜோடி சேர ஆசை: ரீமாசென் ஏக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum