தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் பேசினால் திரைப்பட வாய்ப்பு!

Go down

தமிழ் பேசினால் திரைப்பட வாய்ப்பு! Empty தமிழ் பேசினால் திரைப்பட வாய்ப்பு!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:55 pm

'ஓரம்போ' படத்தில் நகைச்சுவை கலந்து வில்லனாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஜான் விஜய். 'ராவணன்' மற்றும் 'மெளனகுரு' ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு கவனம் பெற்றது.

நடிப்பு மட்டுமன்றி தமிழை நன்கு பேசத் தெரிந்த கதாநாயகிகளை உருவாக்கித் தர என 'எச்2ஓ' எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் ஜான் விஜய்.

களத்தில் 70 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 15 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வானார்கள். அதிலிருந்து தமிழ் பேசும் நாயகிகளாக 5 பேர் வெளி வந்துள்ளனர்.

சஞ்சனா, அஞ்சலி, கோபிகா ஷா, ரமா, பத்மா என இவர்கள் 5 பேரில் முதலிடத்தைப் பெற்று 'தமிழ் பேசும் கதாநாயகி' என்ற டைட்டிலைப் பெற்றவர் சஞ்சனா.

இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வசந்த், எஸ்.ஜே.சூர்யா, பாலாஜி சக்திவேல், எஸ்.எஸ். ஸ்டான்லி, பாலாஜி மோகன், சாந்தகுமார் மற்றும் நடிகை வடிவுக்கரசி நடுவர்களாக இருந்து இந்த 5 நாயகிகளையும் தேர்வு செய்தனர்.

முதலிடம் பிடித்த சஞ்சனாவுக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது அடுத்த படத்தில் நாயகி வாய்ப்பு அளித்து இருக்கிறார்.

இவருக்கு மட்டுமல்ல, மற்ற 'தமிழ்ப் பேசும் நாயகிகள்' நால்வருக்கும் கூட பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. 'பெருமான்' படத்தை இயக்கிய ராஜேஷ், தனது அடுத்த படத்தில் இந்த ஐந்து பேரையுமே ஆரம்பப் பாடலுக்கு ஆட வைக்கப் போகிறாராம். இவர்களுடன் இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட சிலருக்கும் வாய்ப்பு தரப் போகிறாராம்.

நடிகர் 'காதல்' சுகுமார் தான் இயக்கும் முதல் படத்தில் அபிநயா மற்றும் சங்கீதாவுக்கு நாயகி வாய்ப்பு தருகிறார்.

இந்த 'தமிழ்ப் பேசும் கதாநாயகி' போட்டியில் பங்கேற்ற ஜோத்ஸனா என்ற பெண் 'அழகிய முகம் கொண்ட நாயகி'யாக தேர்வானார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இறுதிச் சுற்றில் பங்கேற்ற பதினைந்து நாயகிகளுடனும் பவர் ஸ்டார் மேடையில் ஆட்டம் போட்டு, அவர்கள் அனைவரையும் விட அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்தார்!

இந்த 5 நாயகிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி அண்மையில் சென்னை ஜிஆர்டி ஹோட்டலில் நடந்தது. தமிழ் பேசும் நாயகிகளை தேர்வு செய்த அனுபவங்களைப் நடுவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஜான் விஜய் பேசும்போது, தமிழில் திறமையான நடிகைகள் இருந்தாலும், அவர்கள் சொந்தக் குரலில் பின்னணி (டப்பிங்) பேசாமல் இருப்பதால் தான் நடிகைகளுக்கு விருதுகள் கிடைக்காமல் போகிறது என்றும், அதனால் தான் இப்படி ஒரு முயற்சியை தான் மேற்கொள்ள திட்டமிட்டதாகக் கூறினார்.

இந்த முயற்சிக்கு தனது மனைவி மாதவி மற்றும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலாஜி மோகன் ஆகியோர் பக்கபலமாக இருந்ததாகக் குறிப்பிட்டார் ஜான் விஜய்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum