தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?

Go down

குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?   Empty குழந்தைகளின் படிப்பை எப்படி கவனிப்பது?

Post  amma Thu Jan 17, 2013 10:52 pm



குழந்தையின் பிறந்த ஜாதகத்தில் 2ம் இடம் ஆரம்பக் கல்வி, 4ஆம் இடம் உயர்நிலைக் கல்வி, 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வி. ஆரம்பக் கல்விக்குரிய கிரகம் நன்றாக இருந்தால் சிறிய வயதிலேயே ரொம்ப நன்றாக படிப்பார்கள். ஆனால் அதே சமயம் உயர்நிலைக் கல்விக்குரிய கிரகம் மந்தமாக இருந்தால் 10ஆம் வகுப்பு வரை மந்தமாகப் படிப்பார்கள். இதுபோலத்தான் கிரக அமைப்பை வைத்து அவர்களது படிப்புத் திறன் மாறுபடும்.

ஒருக் கருவில் இருந்த இரட்டையர்களே மாறுபடும்போது, ஒரு பள்ளியறையில் இருப்பவர்கள் எத்தனை வகையில் இருப்பார்கள்.

ஒவ்வொருவரின் கிரக அமைப்பை கணித்துத்தான் அவர்களது கல்வித்திறனை அறிய முடியும்.

1989ல் நான் ஆசிரியராக இருந்த போது, மாணாக்கர்களின் கிரக அமைப்புகளை ஆராய்ந்தேன். சுக்கிர திசை நடக்கும் குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நாம் ஒன்றை சொல்லிக் கொடுத்தால் அதனுடன் மற்றொன்றையும் சேர்த்து அவர்களாகவே கூறுவார்கள்.

சாதாரண மாணவர்களுக்கு சந்திர, சூரிய தசைகள் நடக்கும். இவர்கள் நாம் கற்பிப்பதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான்.

ஆனால், சனி திசை, ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் பிள்ளைகள் ரொம்ப மந்தமாக இருப்பார்கள். நாம் சொல்லிக் கொடுப்பதை அப்போது புரிந்து கொள்வார்கள். கொஞ்ச நேரம் கழித்து கேட்டால் தெரியாது எ‌ன்பா‌ர்க‌ள்.

அதனால் பெ‌ற்றோ‌ர்க‌ளு‌ம் நம்ம குழந்தைக்கு எந்த தசை நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடந்தால் சோம்பேறித்தனம், தூக்கம், மறதி போன்றவை ஏற்படும். எனவே அதற்கெல்லாம் குழந்தைகளைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

ராகு, கேது தசை நடந்தால் பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பது, படம் பார்த்துக் கொண்டே படிப்பது, படுத்துக் கொண்டே படிப்பது போன்றவற்றை செய்வார்கள்.

குரு தசை எல்லாம் நடந்தால் பள்ளியில் இருந்து வந்ததும் முகம், கை கால் கழுவி புத்தகத்தை எடுத்து படிப்பு சம்பந்தமான வேலைகளை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைகளைப் பார்ப்பார்கள்.

இதனால் பிள்ளைக்கு நடக்கும் கிரக நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் போக்கில் போய் அவர்களை அதிகத் திறன் வாய்ந்த குழந்தைகளாக மாற்ற முடியும்.

ராகு தசை நடக்கும் குழந்தைகளை, டேய் படிடா என்று சொன்னால் உடனே படிக்க முடியாது என்று எதிர்மறையாக பதில் சொல்வார்கள்.

ராகு தசை நடக்கும் பிள்ளைகளை கூப்பிட்டு கேள்வி கேட்டால் தெரியாது சார் என்று நேரடியாக பதில் சொல்வார்கள்.

எனவே வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். ராகு தசை நடக்கும் பிள்ளைகளுக்கு தினமும் வீட்டிற்கு வந்ததும் ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு படிக்கச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இதைப் படித்தால் இங்கு போகலாம், அங்கு போகலாம் என்று சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பரிசு, பாராட்டுகள் மூலமாக ராகு தசை நடக்கும் பிள்ளைகளை நல்ல படிப்பாளிகளாக மாற்ற முடியும்.

ஜோதிட அறிவு இருக்கும் பெற்றோர்கள் அல்லது ஜோதிடர் உதவியுடன் தங்களது பிள்ளைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி வழி நடத்திச் செல்லும்போது கற்றல் இனிமையாகும். இல்லையெனில் கற்றல் கடுமையாகும்.

மருத்துவம் படிப்பதற்கான ஜாதகக்காரரை இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்துவிட்டு..
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?
» நடிப்பதற்காக கல்லூரி படிப்பை கைவிட்டார் பிரணிதா.
» என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...
» குழந்தைகளின் எதிர்காலம்
» குழந்தைகளின் படிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum