தேவையில்லாமல் என்னை இழுக்கிறார்கள்: அமீர்
Page 1 of 1
தேவையில்லாமல் என்னை இழுக்கிறார்கள்: அமீர்
என் மீது திட்டமிட்டு வீண் பழி சுமத்துகிறார்கள்' என்று டைரக்டர் அமீர் கூறினார். கார்த்தி-அனுஷ்கா ஜோடியாக நடிக்க, கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக திடீரென்று நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பட அதிபர் கே.ஈ.ஞானவேல்ராஜா அளித்த பேட்டியில், "எனக்கும், டைரக்டர் அமீருக்கும் 'பருத்தி வீரன்' படம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. இதற்காக அவரை அழைத்துப்பேசி, பிரச்சினையை முடித்துக் கொள்ளும்படி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள்" என்று கூறியிருந்தார். இதுபற்றி டைரக்டர் அமீர் கூறியதாவது:- "படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட விவகாரத்தில், தேவையில்லாமல் என் பெயர் இழுக்கப்பட்டு இருக்கிறது. திட்டமிட்டு என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். நாளை (இன்று) தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில், டைரக்டர்கள், லைட்மேன்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் இறுதி செய்யப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில் என்னை கலந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக, இதெல்லாம் நடக்கிறது." யாரு சொல்றது உண்மைனு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா!: அமீர்
» அமீர் படத்தில் பரத்!
» விக்ரமன் படத்தில் அமீர்
» அமீர் Vs ஜெயம் ரவி?
» ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை
» அமீர் படத்தில் பரத்!
» விக்ரமன் படத்தில் அமீர்
» அமீர் Vs ஜெயம் ரவி?
» ஏ சும்மாச்சுக்கும்தான் - அமீர் அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum