இன்று சென்னை திரும்பினார்: முஸ்லிம் அமைப்பினருடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை
Page 1 of 1
இன்று சென்னை திரும்பினார்: முஸ்லிம் அமைப்பினருடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை
கமலஹாசன் நடித்து இயக்கிய `விஸ்வரூபம்' படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை கோர்ட்டுக்கு சென்றுள்ளது. வருகிற 6-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்பினரும் கமலஹாசனும் `விஸ்வரூபம்' பட விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண அரசு உதவும் என அறிவித்தார். இதையடுத்து சென்னை கோட்டையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முஸ்லிம் கூட்டமைப்பு அமைப்பாளர் ஹனீபா, ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கமிஷனர் ஜார்ஜ், கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாசன், ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். உள்துறை செயலாளர் ராஜ கோபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
கமலஹாசன் பேச்சு வார்த்தையில் பங்கேற்காததற்கு முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தி வெளியிட்டனர். அவரிடம் தான் பேசுவோம் என கூறினர். கமலஹாசன் இந்தியில் `விஸ்வரூபம்' படத்தை வெளியிடுவதற்காக மும்பை சென்றார் என்றும் நாளைதான் சென்னை திரும்புகிறார் என்றும் சந்திரஹாசன் விளக்கினார். ஆனாலும் முஸ்லிம் அமைப்பினர் திருப்தி அடைய வில்லை. கமல் வந்த பிறகு பேசலாம் என்றனர்.
இதை தொடர்ந்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. கமல் இன்று பகல் 12.05 மணிக்கு மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்கள் அவரை சந்தித்து வட மாநிலங்களில் விஸ்வரூபம் படத்துக்கு வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது,
வட இந்தியாவில் `விஸ்வரூபம்' படம் மிக சிறப்பாக ஓடுகிறது. ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர் என்றார். பிற்பகல் கோட்டைக்கு சென்று உள்துறை செயலாளரை சந்திக்கிறார். அதன் பிறகு பிற்பகல் மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கிறது. மாலையில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.
முஸ்லிம் தரப்பில் `விஸ்வரூபம்' படத்தில் சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. இவை 20 நிமிட நேரம் கொண்டவை. ஆனால் சந்திரஹாசன் 9 நிமிடம் ஓடும் 8 காட்சிகளை நீக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. மற்ற சீன்களை நீக்குவது குறித்து கமல்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டாராம். கமலுடன் இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் இதற்கு தீர்வு ஏற்படும் என தெரிகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்பினரும் கமலஹாசனும் `விஸ்வரூபம்' பட விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண அரசு உதவும் என அறிவித்தார். இதையடுத்து சென்னை கோட்டையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முஸ்லிம் கூட்டமைப்பு அமைப்பாளர் ஹனீபா, ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கமிஷனர் ஜார்ஜ், கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாசன், ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். உள்துறை செயலாளர் ராஜ கோபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
கமலஹாசன் பேச்சு வார்த்தையில் பங்கேற்காததற்கு முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தி வெளியிட்டனர். அவரிடம் தான் பேசுவோம் என கூறினர். கமலஹாசன் இந்தியில் `விஸ்வரூபம்' படத்தை வெளியிடுவதற்காக மும்பை சென்றார் என்றும் நாளைதான் சென்னை திரும்புகிறார் என்றும் சந்திரஹாசன் விளக்கினார். ஆனாலும் முஸ்லிம் அமைப்பினர் திருப்தி அடைய வில்லை. கமல் வந்த பிறகு பேசலாம் என்றனர்.
இதை தொடர்ந்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. கமல் இன்று பகல் 12.05 மணிக்கு மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்கள் அவரை சந்தித்து வட மாநிலங்களில் விஸ்வரூபம் படத்துக்கு வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது,
வட இந்தியாவில் `விஸ்வரூபம்' படம் மிக சிறப்பாக ஓடுகிறது. ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர் என்றார். பிற்பகல் கோட்டைக்கு சென்று உள்துறை செயலாளரை சந்திக்கிறார். அதன் பிறகு பிற்பகல் மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கிறது. மாலையில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.
முஸ்லிம் தரப்பில் `விஸ்வரூபம்' படத்தில் சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. இவை 20 நிமிட நேரம் கொண்டவை. ஆனால் சந்திரஹாசன் 9 நிமிடம் ஓடும் 8 காட்சிகளை நீக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. மற்ற சீன்களை நீக்குவது குறித்து கமல்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டாராம். கமலுடன் இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் இதற்கு தீர்வு ஏற்படும் என தெரிகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
» விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
» 'விஸ்வரூபம்' பட விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கிறது
» மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!
» மகள்களுக்கு இடையே லடாய்?: சென்னை திரும்பினார் ரஜினி…!
» விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
» 'விஸ்வரூபம்' பட விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கிறது
» மகள்களால் அப்செட்; சென்னை திரும்பினார் ரஜினி!
» மகள்களுக்கு இடையே லடாய்?: சென்னை திரும்பினார் ரஜினி…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum