தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திகில் படத்தில் நடிக்க பயந்த இனியா

Go down

திகில் படத்தில் நடிக்க பயந்த இனியா  Empty திகில் படத்தில் நடிக்க பயந்த இனியா

Post  ishwarya Tue Mar 12, 2013 11:38 am

சென்னை: திகில் படத்தில் நடிக்கும்போது பயந்து நடுங்கினேன் என்றார் இனியா. கே.பத்மராஜா எல்ஜிஆர் இயக்கும் படம் ‘மாசாணி’. எம்.எஸ்.சரவணன் தயாரிக்கிறார். அகில் ஹீரோ. இனியா, சிஜாரோஸ் ஹீரோயின்கள். ராஜகுரு ஒளிப்பதிவு. ஃபாசில் இசை. படம் பற்றி இனியா கூறியதாவது:
‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைபேசி’ படங்களில் யதார்த்தமான கிராமத்து பெண்ணாக பார்த்து அந்த வேடத்திலேயே என்னை கற்பனை செய்து வைத்திருக்கின்றனர். ‘மாசாணி’ கதாபாத்திரம் அந்த எண்ணத்தை மாற்றிக்காட்டும். எதை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவே திரும்ப திரும்ப நம்முன் வந்து நிற்கும் என்பதுதான் கதைக்கரு. முதல்முறையாக திகில் படத்தில் நடிக்கிறேன். அதுவும் டைட்டில் ரோல். பெரிய பெரிய புரொபல்லர்களில் இருந்து தூக்கியடிக்கும் புயல்காற்று, நடுங்க வைக்கும் இரவு காட்சிகள், மழை, மின்னல் என புதிய அனுபவம். இதில் நடிக்க கேட்டபோது மலையாள படத்தில் பிஸியாக இருந்தேன். கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. ஆனால் என்னை சுற்றி இந்த கதாபாத்திரம் வந்துகொண்டே இருந்தது. அதனால் ஏற்றேன். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ராம்கி, இதில் ரீ என்ட்ரி ஆகிறார். அவரது ஜோடியாக நடிக்கிறேன். நடிக்கும்போது நிறைய டிப்ஸ் கொடுத்தார். சீனியர் ஆர்ட்டிஸ்ட் ரோஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum