தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

Go down

திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் Empty திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

Post  meenu Fri Mar 08, 2013 1:23 pm

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 35 ஆயிரத்து 328 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஸி300 சிறப்பு தரிசன டிக்கெட் மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்டது.

மேலும், மலைப்பாதையில் நடந்து வரும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சர்வ தரிசனத்தில் பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதற்கிடையே, சர்வ தரிசனத்துக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், மலைப்பாதையில் நடந்து வரும் திவ்ய தரிசன டிக்கெட்கள் இனி ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
»  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
»  திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
»  சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum