தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூலிகை மாத்திரை

Go down

மூலிகை மாத்திரை  Empty மூலிகை மாத்திரை

Post  oviya Thu Mar 07, 2013 8:41 pm

தேவையான பொருள்கள்:

வில்வ இலை = 200 கிராம்
கருந்துளசி = 200 கிராம்
சிவனார் வேம்பு = 60 கிராம்
சுக்கு = 100 கிராம்
ஓமம் = 20 கிராம்
மிளகு = 30 கிராம்
திப்பிலி = 30 கிராம்

செய்முறை:

சிவனார் வேம்பை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி முற்றிய தேங்காய் நீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து சுக்கை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
மிளகை மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து சலித்து கொள்ளவும்.
திப்பிலியை மண் பாத்திரத்தில் போட்டு 10 மி.லி இளநீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
ஓமத்தை மண் பாத்திரத்தில் போட்டு பொன் வறுவலாக வறுத்து இடித்து சலித்து கொள்ளவும்.
சலித்து வைத்த அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.
கருந்துளசி இலை, வில்வ இலை இரண்டையும் மண் பானையில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு மூடி கால் லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி கஷாயத்தை இறக்கி கொள்ளவும்.

சலித்த கலந்து வைத்த மருந்தை கல் உரலில் போட்டு கஷாயத்தை சிறுக சிறுக ஊற்றி மெழுகு பதத்தில் அரைத்து எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி மண் தட்டில் வைத்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

உபயோகிகும் முறை:

காலை, பகல், மாலை ஒவ்வொறு மாத்திரை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

வாத சுரம், உப்புசம், பேதி, மலச்சிக்கல் போன்ற வ‌யிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும்.

குறிப்பு:

இந்த மருந்து சாப்பிட்டு வரும் போது இறைச்சி, பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், தயிர், கிழங்கு வகைகள், மொச்சை கொட்டை, கடலைபருப்பு ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum