தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அச்சுறுத்தும் பழைய பூதம் - முன் ஜாமீன் கோ‌ரினார் செல்வராகவன்

Go down

அச்சுறுத்தும் பழைய பூதம் - முன் ஜாமீன் கோ‌ரினார் செல்வராகவன் Empty அச்சுறுத்தும் பழைய பூதம் - முன் ஜாமீன் கோ‌ரினார் செல்வராகவன்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:11 pm

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போது படத்தை வெளியிட விடமாட்டேன் என்று பிரச்சனையை கிளப்பிய சேலம் ஏ.சந்திரசேகரன் மீண்டும் பழைய பூதத்தை கிளப்பியிருக்கிறார்.

அந்த பூதம் புகைய ஆரம்பித்தது 2004ல். அப்போது காசிமேடு என்ற படத்தை எடுப்பதற்காக சந்திரசேகரன் செல்வராகவனுக்கு தந்தார். படம் டேக் ஆஃப் ஆகவில்லை. அதனால் வாங்கிய பணத்தை மூன்று தவணைகளாக செல்வராகவன் சந்திரசேகரனுக்கு திருப்பித் தந்தார். இதனை ஆயிரத்தில் ஒருவன் படத்தை அவர் 2010ல் முடக்க நினைத்து கோர்ட்டுக்கு சென்ற போது அவரே ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகும் சந்திரசேகரன் விடுவதாயில்லை. கடந்த மாதம் பிரச்சனையாகி மத்தியஸ்தர் மையத்தில் இருவரையும் அழைத்து‌ப் பேசினர். அப்போது செல்வராகவன் பத்து லட்சம் தந்திருக்கிறார். பிறகும் பூதம் பாட்டிலுக்குள் அடைபடவில்லை. மீண்டும் கிளம்பியிருக்கிறது. சந்திரசேகரன் தனது புகா‌ரில் கொலை மிரட்டல் என்று வேறு சேர்த்திருக்கிறார். இதனால் செல்வராகவன் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம்.

இதனைத் தொடர்ந்து செல்வராகவன் கோர்ட்டில் முன்ஜாமீன் கோ‌ரியிருக்கிறார். இதன் மீதான விசாரணையை நீதிபதி நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum