தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முந்தி வந்து அருள்வாள் முத்தியாலம்மன்

Go down

முந்தி வந்து அருள்வாள் முத்தியாலம்மன் Empty முந்தி வந்து அருள்வாள் முத்தியாலம்மன்

Post  meenu Thu Mar 07, 2013 1:26 pm


ராஜேந்திர சோழன் காலத்தில் வீரசோழ நல்லூர் என்னும் பெயர் பெற்று தற்போது எறும்பூர் என அழைக்கப்படுகிறது. கிராம தேவதையாகவும் இஷ்ட தேவதையாகவும் முத்தியாலம்மன் இவ்வூரில் அருள்பாலிக்கிறாள். ஆடியில் அருட் செல்வியாகவும் தையில் தையல்நாயகியாகவும் நாளும் நலம் தரும் நாராயணியாகவும் வேண்டியவர்களுக்கு விரும்பியதை வழங்கி, நலம் பல தந்து, சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள். முனுகப்பட்டு அருளானந்த சுவாமிகள், 1935ல் முத்தியாலம்மன் வழிபாட்டுப் பாடல்களை இயற்றியுள்ளார். ஆரம்ப காலத்தில் இத்திருக்கோயில் சுண்ணாம்பு, செங்கல் கொண்டு கூம்பு வடிவமாகக் கட்டப்பட்டு மிகவும் பழமையானதாக இருந்தது. கடந்த நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டு 2009ல் மீண்டும் புனரமைப்பு செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முத்தியாலம்மன் ஆலய நுழைவாயில், கிழக்கு திசையை நோக்கி உள்ளது. மூல நாயகியாக அம்பாள் எழுந்தருளி இருக்கிறாள். வலக்கையில் திரிசூலமும் இடக்கையில் உடுக்கையும் ஏந்தியவளாக, மஞ்சள் வண்ணப் பட்டாடை உடுத்தி எலுமிச்சம்பழ மாலையணிந்து அலங்கார ரூபிணியாகத் திகழ்கிறாள். இந்த ஆலயத்தின் மேற்கில் திரௌபதியம்மன் கோயிலருகில் துர்க்கையம்மன் கற்சிலையாக, பத்து கைகளுடன் எருமை வாகனத்தில் வீற்றிருப்பது வேறெங்கும் காண இயலாத எழில்மிகுந்த தோற்றம். அம்மன் கோயில்களில் பொதுவாக வேப்பமரம் தல விருட்சமாக இருப்பது வழக்கம். ஆனால், இக்கோயிலில் வில்வ மரம், தலவிருட்சம். சிறிய வேப்ப மரமும் உண்டு. அதனருகிலேயே நாகக் கன்னியர்களின் கற்சிலைகள் உள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்தியடைய வேண்டிக் கொள்கிறார்கள்.

மக்கள் வழிபட்டு வரும் மற்றொரு கிராம தேவதையான விளாவியம்மன் கோயில் முத்தியாலம்மன் கோயிலருகிலேயே அமைந்திருப்பது சிறப்புடையதாகும். சித்திரை மாதத்தில் பக்தர்கள் முத்தியாலம்மன் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ள விளாவி யம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் வைத்துப் படைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். அம்மனை ஏரிக்கரையிலிருந்து பக்தியுடன் அழைத்து வந்து, ஊரின் சேம நலம் குறித்தும் மழை குறித்தும் பூப்போட்டு பார்த்து அறிந்து கொள்வது வழக்கம். கிராம காவல் தெய்வமாக விளாவியம்மன் கோயிலுக்கு வெளியே ஐயனாரப்பன் சிலையும் உள்ளது.

முத்தியாலம்மன் ஆலயத்தில் பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வருடந்தோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விரதமிருந்து வேண்டுவோருக்கு பிள்ளைப்பேறு கிடைப்பதாகவும் நீண்ட நாட்களாகத் திருமணம் நடைபெறாமல் உள்ளவர்களுக்குத் தடை நீங்கி திருமணம் நடைபெறுவதாகவும் அம்மனை வழிபட்டுப் பயனடைந்த பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது. கோயில் தொடர்புக்கு: 9787897141, 9841681061. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் 11வது கிலோ மீட்டரில் எறும்பூர் கிராமம் அமைந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum