தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரண்டில் கை வைக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷ்

Go down

கரண்டில் கை வைக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷ்  Empty கரண்டில் கை வைக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷ்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:59 pm

ராஜீவ்காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரம் என்று நிஜ சம்பவங்களை படமாக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷின் புதிய படம் வனயுத்தம். சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையான இது பல்வேறு தடைகளை கடந்து வரும் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்துக்காக 11 வருடங்கள் தகவல்கள் சேகரித்தேன், ஒரு வருடம் திரைக்கதை எழுத செலவிட்டேன் என ரமேஷ் பட்டியலிடுகிறார். ஆனால் அவர் அடுத்து சொன்ன விஷயம்தான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அது, தனது அடுத்தப் படம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றியது.

வனயுத்தம் படம் கன்னடத்திலும் தயாராகியிருக்கிறது. நடிகர் ராஜ்குமாரை கடத்தியவன் என்றவகையில் கன்னடர்களுக்கு வீரப்பன் மீது தணியாத கோபம் உண்டு. அதற்கேற்பவே அவர் காட்சிகள் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பணம் கேட்டு ரமேஷை நெருக்கிய போது, எனக்கு யார் பணமும், ஆதரவும் தருகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக படத்தை வெளியிடுவேன் என்று ரமேஷ் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது வீரப்பனை ஆதரிக்கும் தமிழகத்திலுள்ளவர்கள் பணம் தந்தால் வீரப்பனை நல்லவராக காட்டுவார். இதுவே அவனை வெறுக்கும் கன்னடர்கள் என்றால் கன்னடர்களுக்கு சாதகமாக வீரப்பன் காட்டப்படுவார்.

ரமேஷின் முந்தையப் படங்கள் அரைகுறை உண்மையுடன்தான் எடுக்கப்பட்டன. அதேபோன்ற ஆஃபாயில் உண்மையுடன் அவர் பிரபாகரனை பற்றிய படத்தை எடுத்தால் தமிழகத்தில் எதிர்ப்பு நிச்சயம் இருக்கும். கான்ட்ரவர்ஸி என்று கரண்டை கையில் பிடித்திருக்கிறார் ரமேஷ். கடவுள் காப்பாற்றுவராக.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum