தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார்'

Go down

'யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார்' Empty 'யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார்'

Post  meenu Fri Mar 01, 2013 5:48 pm

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சட்டவிரோதமான ஆயதப் பிரிவுகளை இகரசியமான தங்குமிடங்களில் வைத்து நடத்திவருவதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்துப் பேசிய ரணில், வலிகாமம் வடக்கு மீள் குடியேற்ற அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
தொடர்புடைய விடயங்கள்

ஆட்கடத்தல்,
துஷ்பிரயோகம்,
மனித உரிமை,
கொலை,
ரணில் விக்கிரமசிங்க,
மஹிந்த ராஜபக்ஷ

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றையும் நடத்தியிருக்கின்றார். இதில் எதிர்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ன, அசாத் சாலி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில், தமது வாழ்விடங்களில் தம்மை மீள்குடியேற அனுமதிக்கக் கோரி வலி வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தில் சிலர் குழப்பம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு இராணுவ புலனாய்வாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விசாரணை நடத்த வேண்டும் அல்லது தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய உண்ணாவிரதத்தைக் குழப்பிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
'சர்வதேச நாடாளுமன்ற அமைப்புகளிடம் முறையிடப்படும்'
காணாமல்போனவர்களின் உறவினர்கள் தமது துயரத்தை ரணிலிடம் முறையிட்டனர்

காணாமல்போனவர்களின் உறவினர்கள் தமது துயரத்தை ரணிலிடம் முறையிட்டனர்

முன்னதாக கிளிநொச்சிக்குச் சென்ற அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தைப் பார்வையிட்டுவிட்டு, சிறிதரனின் உதவியாளர்கள் அவதூறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து சர்வதேச மட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்புக்கள் மற்றும் பாராளுமன்றங்களின் கவனத்திற்குத் தானே நேரடியாகக் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடிய ரணில், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சர்வதேசத்திற்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ள அரசாங்கம், தானே நியமித்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் வலியுறுத்தியிருக்கின்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum