தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுயமாக ஒரு மாஸ்டர் செக்கப்

Go down

சுயமாக ஒரு மாஸ்டர் செக்கப் Empty சுயமாக ஒரு மாஸ்டர் செக்கப்

Post  meenu Fri Mar 01, 2013 11:41 am

கடவுளின் படைப்பில் உன்னதமான சிருஷ்டி மனிதன். கடவுள் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவனாக உருவாக்கியிருக்கிறார். ஒரு மனிதனின் கைவிரல் ரேகை, இன்னொரு மனிதனில் கைவிரல் ரேகை போல் இருக்கவே இருக்காது. ஒருத்தருக்கு பிடிக்காது. மற்றொருவருக்கு பிடிக்கும். உடல் வாகு அமைப்பின் மாறுதல்களால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சிலருக்கு அதிகமாகவும், மற்றவர்க்கு குறைவாகவும் காணப்படும். ஆங்கில பழமொழி ஒன்று கூறுவது – ஒருவரின் உணவு மற்றொருவருக்கு நஞ்சாகும்.
நாம் நமது உடல் வாகை அறிந்து கொள்ளலாமல், மாறுபட்டு நடக்கும் போது ஆரோக்கிய குறைவு ஏற்படுகிறது. எனவே நம் உடலைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைப்பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். உடல் வாது மாறுபடுவதை அறிய, நாம் வீட்டிலேயே சில சுய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இவற்றுக்கு சில எளிய உபகரணங்கள் தேவைப்படலாம். நாம் வீட்டிலேயே கவனிக்கக்கூடிய விஷயங்கள்
தலையும், கேசமும்
அடிக்கடி தலைமுடியின் நிறம், வளர்ச்சி, அடர்த்தி இவற்றை கவனிக்கவும்.
தினமும் சில முடிகள் உதிர்வது இயற்கை. முடி உதிர்வது அதிகமானால் மற்றும் கொத்து கொத்தாக உதிர்ந்தால் கீழ்க்கண்டவைகள் காரணமாகலாம்.
கவலை மனஅழுத்தம்
உணவில் சத்து பற்றாக்குறை (பி விட்டமின் குறைபாடு)
நாட்பட்ட நோய்கள்
சில மருந்துகள்
குழந்தை பேறு
தைராய்டு சுரப்பி பாதிப்பு
பொடுகு, சோரியாஸிஸ்
இந்த காரணங்களில் எதனால் உங்கள் கேசத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சிகிச்சை முறைகளை கைப்பிடியுங்கள். பொடுகை போக்க ஷாம்புகள், மருந்துகள் உள்ளன. கேசச்சாயமும் அரிப்பை உண்டாக்கி முடியை பாதிக்கும். உங்களுக்கு ஒத்துக் கொள்ளும் கேசச் சாயத்தை பயன்படுத்தவும்.
சருமம்
அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும். உங்கள் முகத்தையும், தோலையும் கவனித்து வந்தாலே, நம் உடலுக்குள் நிகழும் சில மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். தோல் வறண்டு போனால் விட்டமின் ஏ குறைபாடு இருக்கலாம். கடுமையான ரசாயனங்கள் கலந்த சோப்புகள் சோப்பை அடிக்கடி மாற்றுவதும் காரணமாகலாம். விட்டமின் ஏ குறைபாட்டை, பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் எண்ணை சாப்பிடுவதின் மூலமாக போக்கிக் கொள்ளலாம். மென்மையான சோப்புக்களை உபயோகிக்கலாம்.
சருமம் பொலிவிழந்து வெளுத்துப் போளால், சோகையாக இருக்கலாம். குறிப்பாக கன்னங்கள், காது மடல்கள், மூக்கு, உதடு, கண் இமையின் உட்புறம் விரல் நகங்கள் போன்ற இடங்களில் இதை எளிதாக உணரலாம். சருமத்தில் அரிப்பு, சரும சினப்பு போன்றவை தோன்றினால் ஒவ்வாமை காரணமாகலாம். உணவு, உடை, மருந்துகள், சுற்றுப்புற சூழல், இவற்றில் எது ஒவ்வாமைக்கு காரணமென்று கண்டு பிடிக்க வேண்டும்.
சருமத்தின் நிறம் மஞ்சளானால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். மஞ்சள் காமாலை, கல்லீரல் கோளாறு, பித்தப்பை பாதிப்புகள் இருக்கலாம்.

அதே போல் மச்சங்களின் அளவில் மாறுதல்கள், நிறமாறுதல்கள், சிவந்து ரத்தம் கசியத் தொடங்கினால் உடனடி மருத்துவரிடம் போகவும். சரும புற்றுநோய் இவற்றுக்கு காரணமாகலாம்.
சரும வறட்சிக்கு – நீர் இழப்பு – காரணமாகலாம். முன்னங்கையின் மேற்புற தசையை இரண்டு விரல்களால் அழுத்திப் பிடித்து, மேலே இழுத்து பின்னர் விட்டு விடுங்கள். சருமம் கூடாரம் போல் உயர்ந்து நின்று பின்பு தாழுமானால் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வயிற்றுப் போக்கு, வாந்தி காய்ச்சல் இவை காரணமாகலாம். சர்க்கரை, உப்பு கலந்த தண்ணீர் முதலுதவியாக உட்கொண்டு, டாக்டரிடம் செல்லவும்.
உங்கள் விரலைச் சருமத்தின் மேல் சிறிது நேரம் அழுத்தி வைத்திருந்து பின்னர் எடுக்கும் போது ஏற்படும் பள்ளம் உடனே மறையாமல் சிறிது நேரம் இருந்து பின்னர் மறையுமானால் எனப்படும் நீர்மத் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.
இதை உணவில் உப்பை குறைத்துக் கொள்வதின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
கண்கள்
ஒளி மிகுந்த கண்கள் அழகுக்கு அழகு சேர்க்கும். நல்ல உடல் நலம் உள்ளவர்களின் கண்கள் பளிச்சிடும். கருவிழியை சுற்றியுள்ள வெள்ளைப் பகுதி கலங்கலாக பழுப்பாகவோ, மஞ்சளாகவோ இருந்தால் அது கல்லீரல் நோய்களை குறிக்கும். கண்களில் அரிப்பு, சிவப்பு, சுரப்பு, நீர்க்கசிவு போன்றவை இருக்குமானால் அலர்ஜியாக இருக்கலாம். அல்லது பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர் பாதிப்பு இருக்கலாம். கண் டாக்டரிடம் செல்லுவது அவசியம். அதுவும் நீங்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிபவராக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
கண்களின் குறைபாடுகளில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்புரை பொதுவாக கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்படும் கோளாறுகள். கண்ணாடி அணிவதினாலும், கண்புரைக்கு அறுவை சிகிச்சை மூலமும், இந்த கோளாறுகளை சரிப்படுத்தலாம்.
ஆனால் க்ளுகோமா என்னும் கண் அழுத்த நோய் ஆபத்தானது. நாட்பட்ட க்ளுகோமா கண்களில் ஒரு வித அழுத்தத்தை உண்டாக்கி, வேதனையை ஏற்படுத்தும். இதை முதலிலேயே கவனித்து வைத்தியம் செய்து கொள்ளாவிட்டால் கண்பார்வை பறிபோகலாம்.
அடிக்கடி ஏற்படும் தலைவலியும் கண்களின் குறைபாட்டினால் ஏற்படலாம். நெடு நேரம் படிப்பது, குறைந்த வெளிச்சம், டி.வி. பார்ப்பது இவற்றால் கண் தசைகள் களைப்படைந்து தலைவலி ஏற்படக் கூடும். பார்வைத்திறன் குறைவினாலும் தலைவலி வரும். கண் பரிசோதனை தகுந்த சிகிச்சைக்கு வழி காட்டும்.
வாய்
வாய் உடலின் வாசல் கதவு சாலாக்கிய தந்திரா நிகண்டுகளில் 64 வகை வியாதிகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் நாலுவகை கோளாறுகள் முக்கியமானவையாக ஆயுர்வேதம் கூறுகிறது.
நாம் கவனிக்க வேண்டியது கன்னத்தில் உட்புறம், வாய் உதடுகள் இவற்றில் ஏற்படும் புண்கள், ரத்தம் கசியும் ஈறுகள், ஆடுகின்ற, கூச்சமுள்ள பற்கள், பற்குழிகள் இவைகளாகும்.
உதடு, கடைவாய் பகுதியில் ஏற்படும் வெடிப்புகள் விட்டமின் குறைபாடுகளால் உண்டாகும். விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் விட்டமின் சி எடுத்துக் கொண்டால் சரியாகும்.
வாய்ப் புண்கள் இரண்டு வகைப்படும். கேங்கர் புண் கோல்டு புண் கேங்கர் புண்கள் வாயின் உட்புறத்தில் ஏற்படக்கூடியவை. நடுவில் வெந்துபோனது போல் மஞ்சள் நிறமும் சுற்றிலும் சிவந்த ஓரமும் கொண்டிருக்கும். இது பெரும்பாலும் காரம் மிகுந்த உணவு வகைகளாலும், பல் புருசுகள் குத்தி விடுவதாலும், கடித்துக் கொள்வதாலும், பல் செட் அழுத்தினாலும் ஏற்படக் கூடும். இரண்டொரு வாரத்தில் இவை ஆறிவிடக்கூடும். அப்படி ஆறாவிட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
கோல்டு புண்
ஒரு வகையான ஹெர்ப்பிஸ், இது ஒரு வகையான ஹர்ப்பிஸ் வைரஸ் தொற்றினால் வாயின் வெளிப்புறத்தில், உதடுகளில் ஏற்படக்கூடும். இவை வேறு இடத்திற்கும் பரவக் கூடுமாதலால் அடிக்கடி இவற்றைத் தொடுவதைத் தவிர்ப்பதுடன் மருத்துவரிடம் காட்டி மருத்துவம் செய்து கொள்வது நல்லது.
காதுகள்
மூச்சுக் குழாய்களில், சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்பட்டால் நடுச் செவியில் நுண்மத் தொற்று நோய் ஏற்பட்டு, வலியும், தலைச்சுற்றலும் ஏற்படலாம். இவற்றுக்கான நல்ல மருந்துகளை டாக்டரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். காதுகளில் மெழுகு குறும்பி அதிகமானாலும் கேட்கும் திறன் குறையும். தற்போது மெழுகை கரைக்க மருந்துகள் கிடைக்கின்றன. காது மருத்துவர் பீச்சாங்குழல் மூலம் காதை கழுவிவிடுவார்.
காது கேட்கும் திறன் குறைய ஆரம்பித்த உடனேயே வைத்தியம் செய்து கொள்வது உசிதம். காது கேட்காவிட்டால் அது உங்கள் செயல் திறனை பாதித்து மனத்தையும் பாதிக்கும். டெலிபோனில், பேசும் போது சரிவர கேளாமல் போதல், பலர் பேசும் போது புரிந்து கொள்ளாமல் போதல் இவையெல்லாம் உங்களின் காது கேட்கும் திறன் குறைய ஆரம்பித்துவிட்டது என்று பொருள்.
இதோ ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் காது அருகில் கையை வைத்துக் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து நன்றாகத் தேயுங்கள். அந்தச் சப்தம் காதில் விழுந்தால் உங்கள் கேட்கும் திறன் நன்றாக உள்ளது. இல்லாவிடில் கேட்கும் திறன் பாதிப்படைந்துள்ளது என்று பொருள் உங்கள் கைக் கெடிகாரம் எழுப்பும் டிக், டிக் ஒலி காதில் மட்டும் தெளிவாகக் கேட்கிறதா டி.வி. ஒலியை மற்றவர்களுக்குக் கேட்கும் வண்ணம் வைத்து விட்டு கேட்டால் உங்களுக்குக் கேட்கிறதா ஓடுகின்ற பஸ்ஸிலோ அல்லது சந்தடி மிகுந்த உணவகம் ஒன்றிலோ மற்றவர்கள் தொல்லை எதுவுமின்றிப் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிகிறதா அப்படியானால் உங்கள் செவித்திறன் குறைய ஆரம்பித்துள்ளது.
இத்துடன் காதில் மணியலிப்பது போலவும் வலியும், சீழ் கசிவு அல்லது ஒழுக்கும் இருக்குமானால் உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். கண்களைப் போல் செவிகளையும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மட்டுமிகுந்த இரைச்சலும், ஒலியும் தான் செவித்திறனைப் பாதிக்கின்ற முதல் காரணங்கள். ஒலியையும் இரைச்சலையும் உங்களால் குறைக்க முடியவில்லை என்றால் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்து அவை உங்கள் காதில் விழா வண்ணம் செய்து கொள்ளுங்கள்.
கழுத்து
நம் உடல் முழுவதும் அமைந்திருக்கும் நிண நீர் சுரப்பிகள், கணுக்கள் உடலில் நோய் வராமல் தடுத்துக் காக்கின்றன. இந்த சுரப்பிகள், முடிச்சுகள், நோய் வந்து விட்டால் வீங்கிவிடுகின்றன. இவை தொடுவதற்கு மென்மையாகவும், இங்கு மங்கும் நகரக்கூடியவையாக இருக்கும். இவை நகராமல், உருளாமல் கட்டிபோல் இருந்தால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும். நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும் போது, நீர் சுரப்பிகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இதோபோல், தைராயிடு குறைபாடுகளை அறிய, கழுத்தின் இருபக்கங்களிலும் இருக்கும் தைராயிடு சுரப்பிகளை தொட்டுப் பார்க்கவும். அளவில் பெருத்து, கடினமாக இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.
இதயம்

இதயத்தில் ஏற்படுகின்ற லப் – டப் என்ற ஒலி, இதயத்தின் வால்புகளை திறந்து மூடுகிற லயத்தை தெரிவிக்கின்றன. சில சமயங்களில் ஒரு குறுகு வென்ற ஒலி கேட்கும். இதை னீuக்ஷீனீuக்ஷீ என்பார்கள். இந்த சப்தம் தீங்கில்லாதது என்றாலும் இதயத்தில் புதுவித ஒலி எதுவும் கேட்டால் அதை டாக்டரிடம் தெரிவியுங்கள்.
நுரையீரல்
இதோ ஒரு சிறிய மூச்சுப் பரிசோதனை. ஒரு தீக்குச்சியைப் பொறுத்தி அதை உங்கள் உதட்டிலிருந்து 6 அங்குல இடைவெளியில் பிடியுங்கள். முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு மூச்சு முழுவதையும் வெளியே விட்டு விடுங்கள் அதன்பின் மூச்சை உள்ளுக்குள் இழுக்காமல் தீக்குச்சியை ஊதி அணைக்க முடியுமா என்று பாருங்கள். ஊதி அணைக்க முடியாவிட்டால் அல்லது மிகவும் கஷ்டமாக இருந்தால் எம்ப்பைசீமா போன்ற மூச்சுக் குழல் நோய்களின் தொடக்கமாக இருக்கலாம். கவனம்.
இருமல் பெரும்பாலும் ஒவ்வாமை தொண்டை மூச்சுக்குழல் அழற்சி அல்லது உறுத்தல் போன்றவற்றால் மட்டுமே ஏற்படும். சில வேளைகளில் கடுமையான நோய்களின் உணர் குறியாகவும் இருக்கக்கூடும். காய்ச்சலுடன் சேர்ந்து சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் அது நிமோனியா அல்லது ப்ராங் கைட்டிஸ் எனப்படும் ப்ராங்க அழற்சியைக் குறிக்கலாம். வறட்டு இருமல் ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்குமானால் அது வேறு ஏதாவது மறைந்திருக்கும் நோயைக் குறிக்கலாம்.
உயரமும் பருமனும்
ஆண்டுக்கு ஒரு தடவை உயரத்தை அளந்து பாருங்கள். ஒரு சுவருக்கு எதிராக நேராக நில்லுங்கள். ஒரு சிறிய அட்டை அல்லது பென்சிலை உங்கள் தலையின் மேல் வையுங்கள். அட்டை அல்லது பென்சில் சுவற்றில் படுகின்ற இடத்தில் ஒரு புள்ளி வைத்துக் கொண்டு உயரத்தை அளந்துகொள்ளுங்கள். இயல்பாக நீங்கள் முன்பிருந்த உயரத்தை விடக் குறைந்திருந்தால் உங்களது உடலில் கால்ஷியக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது ஆஸ்டியோ பொராசிஸ் எனப்படும் எலும்பு நோய்மையின் விளைவாகவும் இருக்கலாம். பெண்களிடையே இது அதிகம் காணப்படலாம்.
பருமன் என்பது ஒவ்வொரு வாரமும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட மாறலாம். பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியை ஒட்டி எடையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். மாதம் ஒரு முறையாகிலும் உங்கள் எடையைச் சோதியுங்கள். உங்கள் கொழுப்பு தசை தகவு சரியாக உள்ளதா என்பதை கிள்ளுப் பரிசோதனை மூலம் ஓரளவு அறியலாம். மேல் பஜத்தின் உட்புறத்திலும் அடிவயிற்றிலும், தொடையிலும் கிள்ளிப் பார்ப்பதற்கான இடங்களாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுயமாக சாப்பிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!
» மாஸ்டர் ராஜா
» நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்!
»  Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர
» அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum