தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலுறவு பற்றிய நூல்கள்

Go down

பாலுறவு பற்றிய நூல்கள்  Empty பாலுறவு பற்றிய நூல்கள்

Post  meenu Thu Feb 28, 2013 12:07 pm

பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத் தக்கவைதான்.

காம நூல்களை படிப்பதோ வாங்குவதோ அசிங்கம் என்று நினைக்காமல் பல்வேறு சந்தேகங்களை போக்கவும், தவறுகள் திருத்தப்படவும் உதவும் என்பதை உணரலாம்.

காமசூத்ரா

பாலுறவைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள முதல் நூல் காமசூத்ரா. இந்த புத்தகத்தை எழுதியவர் வாத்சாயனர். (கி.பி. 300 முதல் 400). இந்த புத்தகத்தில் தைரியமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பாலியல் சார்ந்த தகவல்களை விவரித்துள்ளார். இந்த நூல் முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது.

காமம் என்பது கேட்டல், பார்த்தல், உணர்தல், நுகர்தல், முகர்தல் என்ற ஐம்புலன்களால் மட்டுமின்றி மனமும், ஆத்மாவும் சேர்ந்து தோன்றுவது என வாத்சாயனார் காமசூத்ராவில் குறிப்பிட்டுள்ளார்.

ரதிரகஷ்யா

கொக்கோகர் (கி.பி. 1000 முதல் 1200 வரை) என்பவர் ரதிரகஷ்யா என்ற நூலை தொகுத்தார். இதில் பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளாகும் பகுதிகள் மற்றும் தூண்டப்படும் காலம்ட பற்றிய நான்கடுக்கு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஆண் - பெண்களின் மூன்று பிரிவுகளையும், பிறப்பு உறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் இந்த புத்தகத்தில் கொக்கோகர் கூறியிருக்கிறார்.

நகர சர்வஸ்வம்

இந்த நூலை பத்மஸ்ரீ (கி.பி.1000) என்ற பவுத்தத் துறவி எழுதியுள்ளார். இந்த நூலில் சங்கத் எனப்படும் பாலுறவுக் குறிப்புச் செய்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதில் காதல் முதல் மற்ற விவரங்கள் என பல்வேறு விஷயங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum