தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ம‌க்க‌ளிட‌ம் வரவே‌ற்பை பெறு‌ம் மூ‌லிகைத் தைல‌ம்!

Go down

ம‌க்க‌ளிட‌ம் வரவே‌ற்பை பெறு‌ம் மூ‌லிகைத் தைல‌ம்!   Empty ம‌க்க‌ளிட‌ம் வரவே‌ற்பை பெறு‌ம் மூ‌லிகைத் தைல‌ம்!

Post  meenu Mon Feb 25, 2013 5:53 pm


ஆ‌ங்‌கில மரு‌த்துவ‌த்தோடு் இப்போது ‌சி‌த்த வை‌த்‌‌‌திய‌மும் மக்களிடம் பரவலாக நம்பிக்கை பெற்றுவரும் நிலையில், மூ‌லிகை‌த் தைல‌ங்கள் ம‌க்க‌ளிடையே வரவே‌ற்பை பெ‌ற்று வருவதுட‌ன், ந‌ல்ல வருமான‌த்தையு‌ம் தரு‌கிறது.

அரு‌ம்பெரு‌ம் ச‌க்‌தியை ச‌ரியாக க‌ணி‌த்தா‌ல் அ‌ன்றாட தேவை‌க்கு பய‌ன்படு‌ம் பல அ‌ற்புத தைல‌‌ங்க‌ள், லே‌கிய‌ம், சூரண‌ம் போ‌ன்றவற்றைத் தயா‌ரி‌க்க முடியு‌ம், மரு‌த்துவ‌ குண‌ம் கொ‌ண்ட தைல‌ங்களையு‌ம் தயா‌ரி‌க்‌க முடியு‌ம் என்பது சித்தர்களின் சொல்.

தைலங்கள் தயாரிப்பதற்கு நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்திவரும் பொரு‌ட்க‌ளும் , ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌ம் மூ‌லிகை செடிகளையு‌ம் பய‌ன்படு‌த்தி தயாரிக்கலாம். சாதாரண தைல‌ங்க‌ள் தயா‌ரி‌க்க அத‌ன் செ‌ய்முறை ப‌க்குவ‌த்தை ம‌ட்டுமே அ‌றி‌ந்து கொ‌ண்டா‌ல் போதுமானது. எ‌ந்‌திர‌ங்களை கொ‌ண்டு அரை‌த்தா‌ல் அதனா‌ல் எழு‌ம் சூடு மூ‌லிகைக‌ளி‌ன் ச‌த்து‌க்க‌ள் குறையு‌ம் வா‌ய்‌ப்பு‌‌ள்ளதா‌ல் பக்குவ‌ம், சுவை, மண‌ம், ‌‌நிற‌ம் மாறாம‌ல் செ‌ய்ய வே‌ண்டிய தொ‌ழி‌ல் இது.

மே‌ற்கு தொட‌ர்‌ச்சி மலை‌யி‌‌ன் பல பகு‌திக‌ளி‌ல் ஏராளமான மூ‌லிகை ‌ப‌யி‌ர்க‌ள் ‌விளை‌ந்து‌ள்ளன. இ‌ச்செடிகளை அடையாள‌ம் க‌ண்டு ப‌றி‌த்து, அவற்றைப் ப‌க்குவ‌ப்படு‌த்‌தி கேச தைல‌‌ங்களை தயா‌ரித்து வரு‌கி‌ன்றன‌ர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளைய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌தியை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

எ‌ல்லாமே மூ‌லிகைதா‌ன் எ‌ன்றாலு‌ம் எ‌‌ந்த நோ‌ய்‌க்கு எ‌ந்த மூ‌லிகை பய‌ன்படு‌‌ம் எ‌ன்பதை வழி வழியாக அறிந்த குடும்பத்தினரே இந்தத் தைலங்களை தயாரித்து வருகின்றனர். இதற்கான கூறுகளையும், தயாரிக்கும் முறைகளையும் விளக்கி வெளியிடப்பட்ட நூல்கள் கிடைக்கின்றன.

ப‌‌ல்வேறு வகை தைல‌ங்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அ‌திக தேவையு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌ம் கொ‌ண்டதாக இரு‌க்‌கிறது கூ‌ந்த‌ல் தைல‌ம். செ‌ம்பரு‌த்‌தி, க‌ற்றாழை, க‌ரி‌‌சிலா‌ங்க‌ண்‌ணி போ‌ன்றவ‌ற்றை பய‌ன்படு‌த்‌தி தயா‌ரி‌க்க‌ப்படு‌கிறது இ‌ந்தத் தைல‌ம். பதமாக கா‌ய்‌ச்‌சி வடி‌த்தெடு‌த்து தே‌ங்கா‌ய் எ‌‌ண்ணெ‌‌யி‌ல் சேர்த்தால் தைல‌ம் தயா‌ர்.

இவ‌ர்க‌ள் தயா‌ரி‌க்கு‌ம் தைல‌‌த்தை அருகாமை‌ கடைக‌ளி‌ல் கொடு‌த்து ‌வி‌ற்பனை வா‌ய்‌ப்பை பெரு‌க்‌கி கொ‌ள்ள முடியு‌ம். மூ‌லிகை தைல‌ங்களு‌க்கு ம‌ட்டும‌ல்லாம‌ல் அவ‌ற்ற‌ி‌ன் மூல‌ப்பொரு‌ட்களு‌க்கு‌ம் தேவை அ‌திக‌ம் உ‌ள்ளது. இவ‌ற்றை ‌விளை‌வி‌த்து தருவத‌ன் மூல‌ம் இ‌ல்ல‌த்தர‌சிகளு‌ம், ‌விவச‌ா‌‌‌‌‌யிகளு‌ம் வருமான‌ம் ஈ‌ட்டு‌ம் வா‌ய்‌ப்பு‌ம் உ‌ள்ளது.

20வது நூற்றாண்டின் துவக்கத்திலேயே, ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சில் கொண்டு்வரப்பட்ட, தலைசிறந்த சித்த வைத்தியரான கண்ணுசாமி பிள்ளையின் தாது வர்க்கம், மூல வர்க்கம் ஆகிய இரண்டு புத்தகங்களில் தாவரங்களின் மருத்துவ குணங்கள் பற்றி பல விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் பயன்பெறலாம். நமது வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய சாதாரண நோய்களில் இருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் வரை தீர்ப்பதற்கான மருந்துகளும், அதனை தரக்கூடிய மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் இந்த புத்தகங்களில் நிறைய உள்ளன. சிலவற்றை நாமே நமது வீட்டில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum