தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடையின் அழகு ராணி நீங்க தான்

Go down

கோடையின் அழகு ராணி நீங்க தான் Empty கோடையின் அழகு ராணி நீங்க தான்

Post  ishwarya Fri Feb 22, 2013 2:33 pm

அழகின் முதல் எதிரி வெயில்! சருமம் கூந்தல் என உச்சி முதல் பாதம் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கற வெயிலை எப்படித்தான் எதிர் கொள்வது? வெயிலைப் பழிப்பதை தவிருங்கள் தினமும் அரை மணி நேரத்தை உங்களுக்காக ஒதுக்கினால் வெயிலின் விபரீத விளையாட்டுகளில் இருந்து உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் மீட்க முடியும். கோடையில் அழகை பாராமரிக்க வழிகளைச் சொல்கிறார் 'நேச்சுரல்ஸ்' வீணா.

சருமத்துக்கு....

லேசான வெயில் பட்டாலே சருமம் கருத்துப் போவதும், பிசுபிசுப்பாக எண்ணெய் வடிவதும் கோடையில் தவிர்க்க முடியாதது. இதை தவிர்க்க மிதமான ஆயில்ஃப்ரீஃபேஸ் வாஸ் கொண்டு, அடிக்கடி முகம் கழுவலாம். இது அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுபடுத்தும்.

வெள்ளரிக்காய் சாறும் தேங்காய் பாலும் சம அளவு எடுத்துக் கலக்கவும். அதில் பஞ்சை நனைத்து, முகம் முழுக்க ஒற்றியெடுத்து பத்து நிமிடங்கள் ஊறிக் கழுவலாம். இது சருமத்தை இயற்கையாக வெளுவெளுப்பாக்கும். வெள்ளரிச்சாறு கலவையை நிறைய தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து அடிக்கடி உபயோகிக்கலாம். குறிப்பாக வெயிலில் அலைந்து விட்டு வந்ததும் தடவினால் கருமை நீங்கும்.

தக்காளியை தோல் நீக்கி சதைப்பகுதியை எடுத்து அத்துடன் தயிர் கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். வெளியூருக்கு சுற்றுலா சென்று விட்டு வந்ததும் கருத்து போன சருமத்தை இயல்பாக மாற்ற முடியும்.

பப்பாளிக்கூழுடன், வாழைப்பழத்தையும் மசித்து முகத்தில் தடவி ஊறிக்கழுவினால் இறந்த செல்கள் அகன்று முகம் பளபளக்கும். ஆரஞ்சுபழச் சாறுடன், தேன் கலந்து சருமத்தில் தடவினால், கருத்த சருமம் மெல்ல மெல்ல நிறம் மாறும். சுத்தமான சந்தனத்தில் பன்னீர் கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருத்த சருமம் மாறுவதுடன் குளுமையாகவும் இருக்கும்.

முல்தானி மெட்டியில், பன்னீர் கலந்து சருமத்தில் தடவினாலும் எண்ணெய் பசை கட்டுப்படும். வெயிலினால் உண்டாகும் சரும எரிச்சல் அடங்கும். கடைகளில் கற்றாலை ஜெல் கிடைக்கிறது. அதில் முல்தானிமிட்டி கலந்து சருமம் எங்கெல்லாம் தடவினால் கருமை நீங்கி பழைய நிறம் திரும்பும்.

பொதுவாக குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பதும் வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதும் நம் வாழக்கம். ஆனால் அதை தவிர்த்து லேசான வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதன் மூலம் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

உள்ளே சாப்பிடுகிற உணவுகளும் சருமத்திலும் கூந்தலிலும் தன் பிரதிபலிப்பை காட்டும். எனவே அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும். லைட்டான உணவுகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்கள் எடுத்துக்கொள்ளவும். பச்சை காய்கறிகளும் சருமத்துக்கு நல்லது. 3லிட்டர் தண்ணீர் குடிப்பதுடன் இடையிடையே இளநீர் நீர்மோர் ஏதேனும் ஜீஸ் எடுத்துக் கொள்ளலாம்.

முடிந்த வரை காலை 10 முதல் 3மணி வரை வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்கவும். அப்படியே தவிர்க்க முடியாத பட்சத்தில் சருமத்துக்கு சன் ஸ்கீரின் கைகளுக்கு கிளவுஸ் தலைக்கு தொப்பி கண்களுக்கு கூலிங் கிளாஸ் உடன் செல்வது பாதுகாப்பானது. யுவி கதிர்களின் பாதிப்பிலிருந்து கண் அவசியம். இல்லாவிட்டால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சுருக்கங்கள் விழலாம்.

சன் ஸ்கீரினை எப்போதும் வெளியில் கிளப்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக தடவவும். வெயில் காலத்தில் மேக்கப் தவிர்ப்பது நல்லது. அவசியம் மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்பவர்கள் வாட்டர் பேஸ்டு ஃபவுண்டேஷன் அல்லது காம்பேக்ட் மட்டும் உபயோகிக்கலாம். மிக லைட்டான ஷேடுகளில் லிப்ஸ்டிக் போடவும். கண்களுக்கு அதிக மேக்கப் வேண்டாம்.

கூந்தலுக்கு

வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரம் 3 முறை கூந்தலை தரமான ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.வியர்வை சேர்ந்தால் மண்டையின் துவாரங்கள் அடைப்பட்டு முடி உதிரும். கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
வெயிலில் வெளியே செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டாம்.. எண்ணெய் வைத்தால் தான் முடி படியும் என்பதால் சிலர் எண்ணெய் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்கள். எண்ணெய் வைத்தால் சிறிது நேரத்தில் தலையை அலசி விட விட வேண்டும். அல்லது முதல் நாள் இரவு வைத்து காலையில் தலையை அலச வேண்டும்.

வெளியே செல்லும் போது முடிபறக்காமலிருக்க ஸ்டைலிங்க் பொருட்களையோ கண்டிஷனரையோ உபயோகிக்கலாம். எண்ணெயுடன் வெளியே செல்லும் போது அழுக்கும் தூசியும் அதிகம் சேர்ந்து பொடுகு முடி உதிர்வெல்லாம் வரலாம். சிறிதளவு தயிரில் முதல் நாள் இரவே கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைக்கவும். காலையில் அதை பேஸ்ட் போல அரைத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறி அலசலாம். இது உச்சி முதர் பாதம் வரை உடலைக் குளுமையாக்குவதுடன் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும் எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும் குளிர்ச்சி கூந்தலும் மிருதுவாகும்.

தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்கக் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும். கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியோ துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலோ உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum