கூந்தல் உதிராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
கூந்தல் உதிராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதிகரிக்கிறது. தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் கூந்தல் வளர்ச்சி தைலங்கள் அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்போது மூலிகையால் தயாரிக்கப்பட்டவை பல்வேறு கம்பெனிகள் கொண்டு வந்துள்ளன. இயற்கை நிவாரண முறைகளையும் நீங்கள் பின்பற்றலாம். அதற்கு சில டிப்ஸ்...
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை கூந்தல் உதிர்வது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே! இந்த குறைபாடுகளால்தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை வாங்கக் கூடாது. நல்ல ஷாம்புகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய், வினிகர் போன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்து குளித்தால் முடி உதிரும் பிரச்சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும்.
நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாதவையாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை கூந்தல் உதிர்வது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே! இந்த குறைபாடுகளால்தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை வாங்கக் கூடாது. நல்ல ஷாம்புகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய், வினிகர் போன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்து குளித்தால் முடி உதிரும் பிரச்சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும்.
நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாதவையாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்? பாகம்-2
» முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
» தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்? பாகம்-2
» முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
» தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum