தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தல் பராமரிப்பு

Go down

 கூந்தல் பராமரிப்பு  Empty கூந்தல் பராமரிப்பு

Post  ishwarya Fri Feb 22, 2013 2:00 pm

பெண்களில் பலருக்கு கூந்தலை பராமரிப்பதில் அலாதி பிரியம். தற்போதைய அவசர வாழ்க்கையில் சரியாக பராமரிக்க முடிவதில்லை. சிலருக்கு கழுத்துக்கு கீழே கூந்தல் வளருவதில்லை என்ற ஏக்கமும் இருக்கும். மருத்துவ ரீதியான பல்வேறு காரணங்கள் தலைமுடி வளர்வதில் உள்ளது. இதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு அதற்கேற்ப பராமரிப்பில் கவனம் செலுத்தினால் போதும்.

வைட்டமின் ஏ குறைவாக இருப்பவர்களுக்கு முடி வளராது. வைட்டமின் ஈ குறைவாக இருந்தால் முடி வலுவாகவோ அல்லது அடர்த்தியாகவோ இல்லாமல் அடிக்கடி உதிர ஆரம்பித்து விடும். சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். உங்கள் கூந்தலுக்கு வாசனை உண்டா இல்லையா என்பதை வீட்டில் வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

தலைமுடி நன்றாக வளர நெல்லிக்காய்,கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இது முடி நன்றாக வளர உதவுவதோடு மயிர்க் கால்களையும் நன்றாக வலுவாக்கும். சடாமஞ்சனை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி நன்றாகவும் அடர்த்தியாகவும் நீண்டும் வளரும்.

மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வந்தால் முடி செழித்து வளர உதவும்.காரட், எலுமிச்சைப் பழ சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால் முடி வளர உதவும். செம்பருத்திபூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தடவ முடி நன்கு வளரும்.

புழுவெட்டு தலையா...:

மாதுளம் பழம் சாறு தடவ முடி வளரும், ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் முடி வளரும். முடி கொட்டுவதை தவிர்க்க...: முடி கொட்டாமல் இருக்கவும், பொடுகிலிருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் பூசி இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின் சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது பொடுகும் வராது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல அரைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து பின் தலைக்கு குளிக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும்.

முடி உதிர்வது நிற்க கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகினால் முடி உதிர்வது நிற்கும். தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல்களால் தலையை நன்கு மசாஜ் செய்வதன் மூலம் வேர்கால்களுக்கு இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி வேர் கால்களின் பலவீனத்தை போக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum