தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்பலப்புழா பாயசம்

Go down

அம்பலப்புழா பாயசம் Empty அம்பலப்புழா பாயசம்

Post  ishwarya Thu Feb 21, 2013 5:11 pm


அம்பலப்புழா பாயசம்

கடவுளுக்குப் படைக்கப்படும் பொருட்கள் புனிதத்தன்மை பெறுகின்றன. அவற்றை அணிவதாலும், சாப்பிடுவதாலும் நம் மனது தூய்மைப்படும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள். அதனால்தான் பிரசாதங்கள் புனிதமானவையாக கருதப்படுகின்றன. நமக்காகப் படைக்கும்போது அது சாதம். இறைவனுக்குப் படைத்த பின் பிரசாதம். பிர என்றால் கடவுள் தன்மைஎன்று பொருள்.

திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம், சபரிமலை அரவணப் பாயசம், அழகர்கோயில் மிளகு தோசை போன்றவை தனித்துவம் மிக்கதாக கருதப்பட அந்தப் புனிதத்தன்மைதான் காரணம். அம்பலப்புழா பாயசமும் அப்படியான ஒரு புனிதப் பிரசாதம்தான். கேரளாவின் புகழ்பெற்ற அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கு படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பாயசம்தான், அம்பலப்புழா பாயசம்.

பச்சை சம்பா அரிசி குருணையும், பாலும், குங்குமப்பூவும் கலந்து பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் இந்தப் பாயசப் பிரசாதத்தை வாங்க அதிகாலை முதலே பக்தர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். காரணம், தெய்வீகத் தன்மையுடன் கூடிய அதன் சுவை, மணம். நம்மூரில் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியம் செய்வது போல கேரளாவில் பாயசம். பாயச வழிபாடு என்றே அங்கு ஒன்று உண்டு.குறிப்பிட்ட தொகை கட்டினால் நம் பெயரில் நைவேத்தியம் செய்து பிரசாதமாகத் தருவார்கள்.

அம்பலப்புழாவில், பாயச வழிபாட்டுக்கு பயங்கரப் போட்டி உண்டு. பாயசத்தின் சுவையும் அதற்கு ஒரு காரணம். அம்பலப்புழா சென்று பாயசத்தை ருசிக்க முடியாதவர்கள் திருவனந்தபுரம் போன்ற பிரதான நகரங்களிலேயே அந்த அனுபவத்தைப் பெறலாம். பெரிய உணவகங்களில் சத்ய சாப்பாட்டோடு சேர்த்து அம்பலப்புழா பாயசம் தருகிறார்கள். தனியாக லிட்டர் அளவில் வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம். லிட்டர் 150 ரூபாய்க்கு விற்கிறார்கள். குறிப்பாக, திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷனில் உள்ள ஹோட்டல் அருள்ஜோதியில், அம்பலப்புழா தரத்தில் இந்த பாயசத்தை ருசிக்கலாம்.




சம்பா பச்சரிசி குருணை - கால்கிலோ,
பால் - 1 லிட்டர், சர்க்கரை - முக்கால் கிலோ,
குங்குமப்பூ - 15 கிராம், முந்திரி - 50 கிராம்,
மில்க்மைடு - 100 மில்லி, நெய் - முந்திரியை வறுக்க தேவையான அளவு.
குருணையைச் சுத்தம் செய்து பாலில் போட்டு வேக வையுங்கள். குருணை குழைந்து, பால் சுண்டிவரும் போது சர்க்கரையையும், நெய்யில் வறுத்த முந்திரியையும் போட்டுக் கிளறுங்கள்.

சர்க்கரை கரைந்து மெல்லிய வாசம் பரவும் வேளையில் மில்க் மைடு, குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால், மணமும், சுவையும் மிக்க அம்பலப்புழா பாயசம் ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum