தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்

Go down

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம் Empty திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:59 pm

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. சஷ்டி விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் கோயில் கடற்கரையில் முருகபெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இதையடுத்து இன்று சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு தெய்வானை தபசு காட்சிக்காக கோயில் தெப்பக்குளம் அருகேயுள்ள நட்டாத்தி பண்ணையார் மண்டபத்திற்கு வீதி உலாவாக சென்று எழுந்தருளினார்.

இன்று மாலை 4.35 மணிக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோயிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார். பின்னர் ஐந்து சந்து தெருவில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, தெய்வானை வீதி உலாவாக கோயிலை சென்றடைகின்றனர். அங்கு இரவு 11.30 மணிக்கு சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum