தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்

Go down

பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்  Empty பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்

Post  meenu Tue Feb 12, 2013 5:17 pm

கடந்த காலங்களை விட இந்த காலக் கட்டத்தில் குழந்தைகளின் இதயம் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டு வருகிறது. கருப்பையில் குழந்தைக்கு எட்டு வாரங்கள் ஆகும் போதே இதயம் உருவாகி விடுகிறது. இதை நாம் Foctal Echocardiography மூலம் அறிந்து கொள்ளலாம். குழந்தைகளின் இதயம் அதிகளவில் பாதிக்கப் படுவதிலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி என்பதைப் பற்றி ஃப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவமனையின் டாக்டர் செரியன் இதோ கூறுவதைக் கேட்கலாம்.

தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொள்வது என முடிவானவுடன் உடனேயே மரபு சோதனை செய்து கொள்வது ஒரு பாதுகாப்பு முறையாகும். ஃப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவமனையில் ஜெனிடிக் ஆராய்ச்சி மையம் (Genetic Research Centre) உள்ளது. நாங்கள் மருத்துவமனைக்கு வரும் தம்பதிகளுக்கு உரிய ஆலோசனை கூறி உடனே இந்த சோதனையை செய்து தேவையான சிகிச்சையை அளிக்கிறோம். இதயம் பாதிக்கப்படுகிற பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு கூட தற்போது பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது.

சமீபத்தல் நிகழ்த்திய சாதனை என்றால் அது இரண்டு மாத குழந்தைக்கு பேஸ்மேக்கர் பொருத்தியது தான்.

இரண்டு மாத குழந்தைக்கு பேஸ்மேக்கர்

உடுப்பியை சேர்ந்த தம்பதிகள் ஜனனி-வாசுதேவ். இருவரும் பல் மருத்துவர்கள். திருமணம் முடிந்து சில மாதத்திலேயே கருத்தரித்தாள் ஜனனி. ஜனனிக்கு குழந்தை பிறக்க வேண்டிய குறிப்பிட்ட தேதிக்கு முன்பே குழந்தை பிறந்து விட்டது. முந்தி பிறந்ததால் குழந்தை இரண்டு கிலோ மட்டுமே எடை இருந்தது. இரண்டு மாதமாகியும் குழந்தை எடை அதிகரிக்காமல் குறைந்து கொண்டே போனது. திடீரென ஒன்றரை கிலோவாகி விட்டது. ஜனனிக்கு குழந்தையை தூக்கவே பயமாகியுள்ளது. அந்த நேரத்தில் உடுப்பி மருத்துவர்கள் சிலர் ப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவமனை பற்றி கூறியுள்ளனர்.

உடனே குழந்தை இங்கு வந்தது. இதய நலனில் பெரும் பங்கு வகிக்கும் பேஸ் பேக்கர் என்ற இதயத் துடிப்பு தூண்டியானை பெரியவர்களுக்கு மட்டுமே பொருத்தி வருவது நாமெல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் 1 1/4 கிலோ கிராம் எடையுள்ள இரண்டு மாத பெண் குழந்தையின் இதயத்திற்கு நாங்கள் பேஸ்மேக்கர் பொருத்தினோம். உலகிலேயே மிக சிறிய எடையுள்ள குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மேஜர் இதய அறுவை சிகிச்சைகளில் இது முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்மேக்கரை பொதுவாக மார்பில் தோலுக்கு அடியில் பொருத்துவோம். அங்கு சதை பகுதியும் பொதுவாக தடிமனாக இருக்கும். அதுவே பாதுகாப்பாகவும் இருக்கும். ஆனால் அந்த குழந்தை மிகவும் சிறிய குழந்தையாக இருந்ததால் பேஸ்மேக்கர் கிடைப்பதே அறிதாக இருந்தது. குழந்தைக்கு இதயத்தில் ஓட்டும் இருந்ததால் ரத்தம் நுரையீரலுக்குள் பாய்ந்து கொண்டு இருந்தது. முதலில் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைத்து பிறகு மேஸ்மேக்கர் பொருத்தினோம்.

குழந்தையை பைபாஸ் மெஷினில் பொருத்துவதில் கூட மிக கவனமாக இருக்க வேண்டி வந்தது. ஏனென்றால் அந்தக் குழந்தை ஒரு பூனைக்குட்டியைப் போல் இருந்தது. அறுவை சிகிச்சை எவ்வளவு முக்கியமோ அதே போல் அதற்கு பின்னர் கொடுக்கப்படும் கவனிப்பும் மிக முக்கியமானது என்றார் டாக்டர் செரியன்.

இந்த அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் ஸ்நேகல் என்ன சொல்கிறார்

சிறிய குழந்தைகளுக்கு வரும் இதய நோய் என்பது கரு உருவாகும் போதே இதய கோளாறுகளுடன் அமையும் வாய்ப்புகள் உள்ளது. இதனை மருத்துவ வளர்ச்சியின் ஒரு பரிணாமம் என்று கூட சொல்லலாம். பொது மருத்துவர்கள், பெற்றோர்கள் கவனமாக இருந்தால் கண்டிப்பாக குழந்தையை காப்பாற்ற முடியும். குழந்தை பிறந்தவுடன் இதய பரிசோதனை செய்து விடுவது இழப்பினை தவிர்க்க உதவும் என்றார் டாக்டர் ஸ்நேகல்.

இந்த அறுவை சிகிச்சை குழுவிற்கு தலைமை வகித்த டாக்டர் கே.எம்.செரியன் மேலும் கூறியதாவது

இந்த அறுவை சிகிச்சை முழுவதும் டீம் ஓர்க் தான். இந்தக் குழந்தைக்கு நெஞ்சகப் பகுதியில் சதைப்பற்றே இல்லை. எனவே நுரையீரலுக்கும் நெஞ்சக கூட்டிற்கும் இடையே இந்த 50 கிராம் எடையுள்ள பேஸ்மேக்கரை பொருத்தினோம். ஏழு ஆண்டுகள் கழித்து இந்த பேஸ்மேக்கரை மாற்றும் போது எப்பொழுதும் போலவே பொருத்தி விடலாம்.

இது போன்ற பேஸ்மேக்கர் பொருத்தப்படும் குழந்தைகளை அதிக வோல்டேஜ் உள்ள இடங்களுக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொபைல், டி.வி. ரிமோட், மைக்ரோவேவ் அவன் ஆகியவற்றின் அருகில் கொண்டு செல்லக் கூடாது. பெண் குழந்தையாக இருந்தாலும் அறுவை செய்து வடு நாளாவட்டத்தில் குழந்தை வளர வளர மாறி விடும்.

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பெற்றுக் கொள்வதே லக்ஸீரியாக இருக்கும்போது அது முழு ஆயுள், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். எனவே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவானவுடன் மரபு பரிசோதனை செய்து கொள்வது ஒரு பாதுகாப்பு முறையாக இருக்கும்.

தாய், தந்தை வழியிலோ இந்த பிரச்சினை யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் தம்பதிகள் கண்டிப்பாக இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மரபு வழியில் இந்தப் பிரச்சனை இல்லாவிட்டாலும் யார் வேண்டுமானாலும் இந்த மரபணு சோதனையை செய்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் டாக்டர் செரியன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum