தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா? இதப்படிங்க!

Go down

வீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா? இதப்படிங்க! Empty வீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா? இதப்படிங்க!

Post  ishwarya Tue Feb 12, 2013 4:56 pm

Green Chilli
வீட்டுத்தோட்டத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பவர்கள் நாற்றாங்கால் தொடங்கி காய்க்கும் பருவம் வரை கவனமாய் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள். ஏனெனில் மிளகாய் செடிகளை தாக்கும் நோய்களையும், பூச்சிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே மிளகாய் செடியில் நல்ல மகசூலை பெறமுடியும் என்கின்றனர் அவர்கள்.

தரமான மிளகாய் செடி வளர்ப்பு பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

பயிரிடும் பருவம்

பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம். ஜனவரி – பிப்ரவரி, ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம். மிளகாய் வளர மித வெப்பமான பருவமே ஏற்றது அதிக குளிரோ, அதிக வறட்சியோ ஏற்றதல்ல. எனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும். அதேபோல் அதிக தண்ணீர் ஊற்றி நிலம் களிமண்ணாக இருந்தாலும் ஏற்றதல்ல என்கின்றனர் வேளாண்துறையினர்.

நோய் தாக்குதல்

பச்சை மிளகாயை நாற்றழுகல் நோய், பழ அழுகல் நோய் தாக்கும். பச்சைமிளகாயின் நாற்றுக்கள் மடிந்து சொட்டையாக மாறிவிடும். இதற்கு பூஞ்சைத்தாக்குதலே காரணமாகும். மண்ணில் காணப்படும் இந்த பூஞ்சைகள் விதை விதைத்த உடன் நாற்றாங்களை தாக்கத் தொடங்குகின்றன.

இப்பூஞ்சை தாக்குதலினால் செடிகள் வளராமல் திட்டு திட்டாக காணப்படும்.

நாற்றங்கால் நிலத்தை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும். போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்க வேண்டும். மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். இதனால் நாற்றுக்கள் நன்கு வளரமுடியும்.

பூக்கும், காய்க்கும் பருவம்

மிளகாய் செடி நன்றாக பூக்க வேண்டுமெனில் பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பூ நன்றாக பூக்கும். இதேபோல் டிரை கார்டினாலை ஒரு லிட்டர் தண்ணீரில் 25 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க நன்றாக காய் பிடிக்கும்.

பூச்சித்தாக்குதல்

மிளகாய் செடியை இலைப்பேன், அசுஉணி, செஞ்சிலந்து ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அதேபோல் காய் பிடித்திருக்கும் பருவத்தில் காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கும். இவற்றை விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அளிக்கலாம். மிளகாய் காய்த்த உடன் அவற்றை பறித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் புதிய பச்சை மிளகாய் காய்க்கும்.

அதேபோல் மிளகாய் செடிகளுக்கு அருகில் உளுந்து, பாசிப்பயறு செடிகளை பயிரிட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி விளைச்சல் நன்றாக இருக்கும் என்கின்றனர் வேளாண்மைத்துறையினர். இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum