தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உறவுப்பாலத்தை இணைக்கும் காதல் வங்கி: டெபாசிட்டை அதிகரிங்க

Go down

உறவுப்பாலத்தை இணைக்கும் காதல் வங்கி: டெபாசிட்டை அதிகரிங்க Empty உறவுப்பாலத்தை இணைக்கும் காதல் வங்கி: டெபாசிட்டை அதிகரிங்க

Post  ishwarya Tue Feb 12, 2013 1:00 pm

Romance Tips
குடும்பத்தில் உறவுகளிடையே இணக்கம் அதிகரிக்க மூளையில் உள்ள காதல் வங்கியில் டெபாசிட்டை அதிகரிக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வங்கியில் இருந்து அடிக்கடி எடுத்து இருப்பு பூஜ்ஜியமாகிவிட்டால் அது உறவுக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

உணர்வுகளின் சங்கமம் மனித மூளையில்தான் நிகழ்கிறது. கோபமோ, அழுகையோ, காதலோ பாசமோ மூளையில்தான் உருவாகிறது. நீண்டகாலம் ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் மனித மூளையில் காதல் வங்கி ஒன்று இயங்குவதை கண்டறிந்துள்ளனர்.

இந்த காதல்வங்கியின் செயல்பாடுகளை பற்றி கூறியுள்ள ஆய்வாளர்கள், மூளையில் காதல் வங்கியை செயல்பட வைப்பது ஒருவித ரசாயன கலவை. காதலர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப் பூர்வமாக பார்க்கும்போது இந்த ரசாயன கலவை மின்னல் வேகத்தில் செயல்படுகிறது. ஆண்- பெண் காதல் வங்கியில் தங்களுக்கு பிடித்த முகம் "டெபாசிட்" செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயண மாற்றம் மாறாது. அந்த ரசாயணமே அந்த பெண்- ஆண் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.

அப்படிப் பார்க்கும்போது அந்தக் காதல் வங்கியின் செயல்பாடு முன்பை விட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களைத் தவிர வேறு எதையும் நாடாது என்று கூறியுள்ளனர். காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துதல் பிடித்தமான பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பது, பாராட்டிப் பேசுவது, விட்டுக் கொடுப்பது போன்ற செயல்பாடுகளால் காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாகும். இந்த மாதிரியான சொல்களைத் தான் டெபாசிட் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

காதல் வங்கியில் "வித்டிரா" (எடுப்பு) அதிகரித்தால் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டு விடும். காதல் ஜோடி ஒருவரை ஒருவர் வெறுப்பது, திட்டிக் கொண்டிருப்பது, சந்தேகப்படுவது, நம்பிக்கை இல்லாதது, பொய் பேசுவது, பழி போடுவது போன்ற சொல்களில் ஈடுபடுவதை "எடுப்பு" என்கிறோம். இந்த எடுப்பு அதிகரித்தால் காதல் வங்கியில் உள்ள சேமிப்பு குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டிவிடும். இந்த பூஜ்ஜிய நிலை வரும் போதுதான் காதல் ஜோடி பிரியும் நிலை ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

காதல் வங்கியில் முக்கியமாக 5 விஷயங்கள் உள்ளன. 1. டெபாசிட், 2.எடுப்பு, 3. சேர்ந்து முடிவு, 4. காதலில் நேர்மை, 5. காதலுக்கு நேரம் ஒதுக்குவது. காதல் வங்கியில் அதிகம் டெபாசிட் செய்யவேண்டும். சேமிப்பு பூஜ்ஜியமாக இருந்தால் நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் வீட்டில் ஒரே போராட்டமாக இருக்கும். எனவே காதல் வங்கிகள் நாட்டில் பெருகினால் விவாகரத்துக்கள் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த வங்கி திவாலாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கையில்தான் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum