தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்பத்தில் சண்டையைத் தடுக்க 'காந்தியம்' கை கொடுக்குமா?

Go down

குடும்பத்தில் சண்டையைத் தடுக்க 'காந்தியம்' கை கொடுக்குமா? Empty குடும்பத்தில் சண்டையைத் தடுக்க 'காந்தியம்' கை கொடுக்குமா?

Post  ishwarya Tue Feb 12, 2013 12:20 pm

Does Gandhism Helps In Relationships?
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பார்கள். சண்டை இல்லாதே வீடே இல்லை என்பதைச் சொல்ல இந்த பழமொழி. உண்மையும் அதுதான். வீடு என்றால் சின்னச் சி்ன்ன சண்டைகள் இருக்கும்தான். அந்த சண்டை பெரிதாகி பிளவு வரை போய் விடாமல் பார்த்துக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

கணவனோ, மனைவியோ இருவரில் யார் சண்டை போட்டாலும் ஒருவர் அடங்கிப் போய் விடுவதுதான் நல்லது. அப்போதுதான் சண்டை சீக்கிரமே முடிவுக்கு வர முடியும். இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கமாக கத்திக் கொண்டிருந்தால் சண்டை வலுத்து பெரும் போர்க்களமாகி விடும் வாய்ப்புள்ளது.

இந்த இடத்தில் நமக்கு காந்தி கை கொடுப்பார். அதாவது காந்தியடிகளின் அகிம்சை, சகிப்புத்தன்மை, பொறுமை ஆகிய குணங்களை, தத்துவங்களை தம்பதியர் கடைப்பிடித்தால் 'வன்முறை' இல்லாத குடும்பமாக நமது குடும்பத்தை மாற்ற முடியும்.

காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்திய வழியி்ல் எப்படி உறவுகளைப் பாதுகாக்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம்...

மோதல்களுக்குத் தீர்வு

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். எனவே ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்த இடத்தில் சகிப்புத் தன்மை, பொறுமை ஆகிய காந்திய தத்துவங்கள் நமக்குக் கை கொடுக்கும். கணவர் அல்லது மனைவி இருவரில் ஒருவர் சண்டை வலுக்கும்போது அமைதியாகி விட வேண்டும். என்ன திட்டினாலும் மகா பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நம்முடன் சண்டைக்கு வந்தவர் திருந்த வாய்ப்பு கிடைக்கும், பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.

தெளிவாக, உறுதியாக இருங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது காந்தியைப் போல செயல்பட வேண்டும். அதாவது நாம் எடுக்கும முடிவு சரியா, தவறா என்பதை பலமுறை யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அது மற்றவர்ளுக்கு தீங்கிழைக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லாம் சரி என்று உணர்ந்தால் தைரியமாக அந்த முடிவை எடுக்கலாம். அதேசமயம், அதை அடையும் வரை உறுதியுடன் இருக்க வேண்டும்.

எதிலும் சமாதானம்

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அமைதியான முறையில் அதற்காகப் போராட வேண்டும். கணவருடன் சண்டையா, அவருடன் எந்த வாக்குவாதமும் வேண்டாம். மாறாக சகிப்புத்தன்மையுடன் அவரிடம் அன்று கூடுதல் பாசம் காட்டுங்கள். மனைவியுடன் மோதல் வரும்போது கணவரும் இவ்வாறு
செய்யலாம்.

இப்படி உறவுகளிலும் கூட காந்தியத்தை ஒவ்வொரு இடத்திலும் நாம் கடைப்பிடிக்க முடியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்?
» பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்: கொல்கத்தா பதிலடி கொடுக்குமா?
» புனே வாரியர்சுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?
» விட்டுக்கொடுங்கள் குடும்பத்தில் ஒற்றுமை தழைக்கும்!
» மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum