தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரத்தின் காய் வகை

Go down

மரத்தின் காய் வகை Empty மரத்தின் காய் வகை

Post  oviya Sun Feb 10, 2013 5:02 pm

வாழைக்காய்:

பித்த வாந்தி, மனச்சோர்வு, பித்தாதி சுரம், உமிழ் நீர் சுரப்பு, வயிறு உளைதல், உஷ்ணம், இருமல் ஆகியவை நீங்கும். இர்த்த விருத்தியும், பலமும் உண்டாகும். உணவின் அளவு அதிகரிக்கும்.
பலாக்காய்:

அக்கினி மந்தம், வாத கோபம், ஆயாசம், சுவாசம், விந்து விருத்தி ஆகியவை உண்டாகும்.
அத்திக்காய்:

பிரமேகம், வாத நோய், சூலை, உடல் வெப்பம், வீரணம் ஆகியவை நீங்கும். மலங்கழியும்.
முருங்கைக்காய்;

கபம் நீங்கும். விந்து அதிகரிக்கும்.
அருநெல்லிகாய்:

சீதபித்தம், தாகம், காசம், உட்சூடு ஆகியவற்றை போக்கும்.
நெல்லிக்காய்:

பகலில் சாப்பிட்டால் மனச்சோர்வும், கப நோய், வாயில் நீர் சுரப்பு, வவாந்தி, உன்மத்தம், மலபந்தம், தலைச்சுழல், பிரமேகம் ஆகியவை நீங்கும். அழகு உண்டாகும். இதன் புளிப்பால் வாயுவும், துவர்ப்பால் கபமும் நீங்கும்.
புளியங்காய்:

சோருதலையும், பித்த கோபத்தை நீக்குவது தவிர, வாத தோஷத்தை உண்டாக்கும். இதை கர்ப்பம் தரித்த பெண்கள் விரும்புவார்கள்.
மாங்காய்:

விந்து குறைவு நீக்கும். அதிக வாயு, சிரங்கு, தேகம் வெடித்தலோடு கூடிய ஆறாத விரணம், பல் கூசுதல் ஆகியவை உண்டாகும். பசி நீங்கும்.
மிரியங்காய்:

இதனை புளிமாங்காய் என்றும் கூறுவர். இந்த காய்களினால் வாய் கசப்பும், அரோசகமும் நீங்கும். இது சுரரோகிகளுக்கு உதவும்.
பச்சை கடுக்காய்:

இதை பரிதிக்காய் என்றும் கூறுவர். பச்சை கடுக்காயை கொட்டை நீக்கி இடித்து அதில் 5-ல் ஒரு பங்கு உப்பு போட்டு 105 நாட்களுக்கு பிறகு பிசைந்து அதை சாதத்தில் சேர்த்தாவது, தனித்தாவது சாப்பிட்டால் அரோசகம் தீரும். பசி உண்டாகும். மலங்கழியும்.
இத்திக்காய்:

இத்திக்காய்களுக்கு வாதம், மலபந்தம் நீங்கும்.
கொடி எலுமிச்சங்காய்:

கொடி எலுமிச்சங்காய்களுக்கு வாந்தி, பித்தம், மயக்கம், மலபேதி, பித்த அரோசகம் ஆகியவை விலகும்.
எலுமிச்சங்காய்:

வாத, பித்த, கப நோய்களும், வாத சிலேஷ்மம், சூலை, வாந்தி, இடுமருந்து, பித்த உஷ்ணம் இவற்றை போக்கும்.
கலுமிச்சங்காய்:

பார்வைக்கு எலுமிச்சங்காய் போல் தெரியும். கழுமிச்சங்காய் பற்களை விழச்செய்யும். தவிர சீதளத்தையும், வீரிய நஷ்டத்தையும் உண்டாக்கும்.
நாரத்தங்காய்:

வாத நோயும், வாலுள்ள மலக்கிருமியும் நீங்கும். பசி உண்டாகும். இதன் புளிப்பினால் உடல் தூய்மை ஆகும்.
கடார நாரத்தங்காய்:

பித்த நோயும், வாயில் நீர் ஊறலும், ருசியின்மையும் நீங்கும். இது மனச்சோர்வுகளுக்கானது. நோயாளிக்கு நல்லது.
கொளுஞ்சி நாரத்தங்காய்:

இதனை கொடி நாரத்தை , முலை எலுமிச்சை துரிஞ்சி என்றும் கூறுவர். இருமல், ஆமதோஷம், வாத விரணன், கபாதிக்கம், தாகம் ஆகியவற்றை நீக்கும்.
பனை நுங்கு:

நுங்கின் நீரானது வியர்க்குருவை நீக்கும். பசியை உண்டாக்கும். தோலுடன் கூடிய நுங்கு சீதபேதியை விலக்கும்.
இவை அனைத்தும் மரத்தின் காய் வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum