தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தல் எதுக்கு அதிக எண்ணெய் பசையா இருக்கு?

Go down

கூந்தல் எதுக்கு அதிக எண்ணெய் பசையா இருக்கு? Empty கூந்தல் எதுக்கு அதிக எண்ணெய் பசையா இருக்கு?

Post  ishwarya Thu Feb 07, 2013 4:36 pm

நிறைய மக்களுக்கு எதற்கு கூந்தலில் மட்டும் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கிறது என்று தெரியவில்லை. அதற்காக என்னென்னவோ செய்து பார்ப்பார்கள். இருப்பினும் அந்த எண்ணெய் பசை இருக்கிறது. ஆகவே முதலில் அதனை போக்குவதை விட, எதற்கு ஏற்படுகிறது என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து கொண்டு, பின்னர் அந்த எண்ணெய் பசை போக்குவதற்கான செயல்களை செய்தால், ஒரு பலன் இருக்கிறது. ஆகவே இப்போது கூந்தல் எண்ணெய் பசையாக இருப்பதற்கான காரணங்களைப் பார்ப்போமா!!!

* கூந்தல் எண்ணெய் பசையோடு இருப்பதற்கான முதல் காரணம், உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில் அளவுக்கு அதிகமான அளவில் எண்ணெய் சுரப்பதே ஆகும். அந்த பொருளுக்கு செபம் என்று பெயர். எண்ணெய் சுரப்பில் அந்த செபம் என்னும் பொருள் அதிகமாக சுரப்பதால், ஸ்கால்ப் மற்றும் கூந்தல் அதிகமாக எண்ணெய் பசையோடு காணப்படுகின்றன. இதனை உடனே முழுவதும் சரிசெய்துவிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

* நிறைய பேர் எதற்கெடுத்தாலும் கூந்தலை அடிக்கடி நீவிக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு செய்வதால், கூந்தலுக்கு நிறைய பிரச்சனைகளான கூந்தல் உதிர்தல், எண்ணெய் பசையான கூந்தல் போன்றவை ஏற்படுகின்றன. ஏனெனில் எண்ணெய் பசையுள்ள பொருட்கள் மற்றும் இதர பொருட்களில் கையை வைத்துவிட்டு, நேரடியாக மறுநிமிடம் அந்த கைகள் கூந்தலுக்கு தான் செல்லும். ஆகவே எப்போதும் அடிக்கடி கைகளை கூந்தலில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* உணவும் மற்றொரு காரணம். ஏனெனில் அதிக அளவில் எண்ணெய் பசையுள்ள உணவுகளை உண்பதால், அதில் உள்ள எண்ணெய் உடலில் சென்று அதிக அளவில் எண்ணெயை வெளிப்படுத்துகிறது. அதிலும் இத்தகைய எண்ணெய் கூந்தலில் மட்டும் வெளிவராமல், உடல் முழுவதுமே வெளிவருகிறது. ஆகவே எந்த உணவை உண்டாலும் அளவோடு உண்ண வேண்டும்.

* அடிக்கடி வெளியே செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆகவே வெளியே இருக்கும் மாசடைந்த சுற்றுச்சூழலால், கூந்தலில் அழுக்குகள் புகுந்து, தலையில் படிந்துவிடுகின்றன. இதனால் தலையை மற்றும் கூந்தலைப் பார்த்தால், எண்ணெய் பசையோடு இருக்கும். எனவே கூந்தலுக்கு ஷாம்பு போட்டு, தினமும் அல்லது ஒரு நாள் விட்டு குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

* வண்டிகளை ஓட்டும் போது, அதில் இருந்து வரும் புகையில் ஒரு குறிப்பிட்ட அளவில் எண்ணெய் பொருள் உள்ளது. ஆகவே அது கூந்தலில் படுவதால், கூந்தல் வறண்டு, அதிக எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. ஆகவே அவ்வாறு செல்பவர்கள், தலையில் ஏதேனும் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் தினமும் ஹெர்பல் ஷாம்புவை போட்டு குளிக்க வேண்டும். எனவே அந்த எண்ணெய் பசையை ஈஸியாக தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் கூந்தலை பராமரித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு இருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஹேர் பேக்கை போட்டாலும், கூந்தல் பட்டுப் போன்று இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum