தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான்

Go down

 எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான் Empty எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான்

Post  meenu Fri Feb 01, 2013 1:07 pm



உங்கள் மகனுக்கு வெகு சீக்கிரம் மனநோய் தீர வழி சொல்கிறேன், கவலைப்படாதீர்கள். எல்லா தேவதைகளாலும் அஞ்சப்படும் சிவனை வணங்குங்கள். இருளோடி இருக்கும் மனதில் வெளிச்சம் உண்டாகும்.

தங்கள் மகனை கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூர் தலத்தில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச மாலையை 108 என்ற எண்ணிக்கையில் செய்து ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள்.

பிறகு, அதை வாங்கி தங்கள் மகன் கழுத்தில் போட்டு அபிஷேக தீர்த்தம் உட்கொள்ளச் சொல்லுங்கள். கோயில் பிராகாரத்தை ஒரு நாளில் மூன்று முறை வலம் வரச் சொல்லுங்கள்.

முடிந்தால் மூன்று நாட்கள் அந்த தலத்தில் தங்குங்கள். இன்னொரு முக்கிய விஷயம், வீட்டில் எப்போதும் சுகந்தமான மணம் கமழும் ஊதுவத்தியை ஏற்றி வையுங்கள். தீங்கு செய்யும் துர்தேவதைகளின் நடமாட்டம் குறையும்.

அழுக்குத் துணிகள் நிறைய வீட்டில் இருந்தால் அகற்றிவிடுங்கள். துர்நாற்றம் அதிகமிருக்கும் இடங்களில் துர்தேவதைகள் நடமாட்டம் இருக்குமென சாத்திரங்கள் சொல்கின்றன.

தந்தையாக ஒரு மகனுக்கு உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். கப்பலில் பிரயாணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது பகவான் பொறுப்பு.

உங்கள் மகனுக்காக ‘ஸர்வபூத தமனாய நமஹ’ என்னும் திருநாமத்தை விடாது ஜபித்து சிவனை பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் மகன் தெளிவு பெறுவான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்த
» எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்தா
»  என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum