கிருஷ்ணகிரி: அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 30 பயணிகள் தப்பினர்
Page 1 of 1
கிருஷ்ணகிரி: அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 30 பயணிகள் தப்பினர்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தர்மபுரி நோக்கி புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்தார். சுப்பிரமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.
நள்ளிரவு 11 மணியளவில் பஸ் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தை தாண்டி மொட்டூர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு வேகத்தடை இருந்ததால் டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டினார். அப்போது சாலை ஓரத்தில் இருட்டில் மறைந்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்தினார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பஸ்சின் முன்பக்கம் வந்து கண்ணாடியை உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்தனர்.
மேலும் பஸ்சின் உள் பேனட் மீது பெட்ரோல் குண்டை வீசினர். அது சிதறி தீப்பிடித்தது. இதையடுத்து டிரைவர், கண்டக்டக்டர் மற்றும் பயணிகள் தீயை அணைத்தனர். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து டிரைவர் வேலுசாமி பஸ்சை கிருஷ்ணகிரி பஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கு பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை புறநகர் டெப்போவுக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சந்தானப்பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மர்ம கும்பலை சேர்ந்த யாராவது பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடத்தினர். தொடர்ந்து விடிய, விடிய அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராமநாதபுரத்தில் திமுக எம்.பி. ஜே.கே.ரித்திஷ் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» மாலியில் பிரான்ஸின் குண்டு வீச்சு தொடர்கிறது
» கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
» செல்பேசி மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு அதிகரித்தால் அபராதம்: மத்திய அரசு
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» மாலியில் பிரான்ஸின் குண்டு வீச்சு தொடர்கிறது
» கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
» செல்பேசி மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு அதிகரித்தால் அபராதம்: மத்திய அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum