நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
Page 1 of 1
நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
மதுராந்தகம் அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர் பலி
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா திப்பிரமலை கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜீ ஓட்டினார்.பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த ஒழுபாக்கம் அருகே பஸ் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தேங்காய் லோடு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய பஸ் டிரைவர் ராஜீ (வயது 45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
17 பேர் காயம்
இந்த விபத்தில் சிந்து (21), மேரிலதா (21), மதுஷா (20), மரிமதனி (20) உள்பட 9 மாணவிகள், 7 மாணவர்கள், பூந்தமல்லி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றும் சுபிதா (25) என்று 17 பேர் படுகாயம் அடைந்தனர். மாணவ–மாணவிகள் கல்லூரி திறப்பதையடுத்து சொந்த ஊரில் இருந்து வந்த போது விபத்தில் சிக்கி உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டதுவிபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிரைவர் பலி
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா திப்பிரமலை கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜீ ஓட்டினார்.பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த ஒழுபாக்கம் அருகே பஸ் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தேங்காய் லோடு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய பஸ் டிரைவர் ராஜீ (வயது 45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
17 பேர் காயம்
இந்த விபத்தில் சிந்து (21), மேரிலதா (21), மதுஷா (20), மரிமதனி (20) உள்பட 9 மாணவிகள், 7 மாணவர்கள், பூந்தமல்லி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றும் சுபிதா (25) என்று 17 பேர் படுகாயம் அடைந்தனர். மாணவ–மாணவிகள் கல்லூரி திறப்பதையடுத்து சொந்த ஊரில் இருந்து வந்த போது விபத்தில் சிக்கி உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டதுவிபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதல்: போலீஸ் அதிகாரி மனைவியுடன் பலி
» கிருஷ்ணகிரி: அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 30 பயணிகள் தப்பினர்
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி
» கிருஷ்ணகிரி: அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 30 பயணிகள் தப்பினர்
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» தாய்லாந்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum