தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கந்தன் கருணை # 3

Go down

கந்தன் கருணை # 3  Empty கந்தன் கருணை # 3

Post  ishwarya Fri Feb 15, 2013 1:05 pm


இதுதான் போட்டி என
இறைவனும் முடித்தக் கணமே

தண்டைகள் சிலம்போடு ஆட
மேல் ஆடையும் பின்னே ஓட
ஒரு காலினை கயிலையில் மிதித்து
மறு காலினை மயிலினில் பதித்து
யாவரும் காணும் போதே
கணத்தில் பறந்தான் குமரன்.(9)

கண்ணினில் பிறந்த கந்தன்
காற்றிலே கடுகி மறைய,
உமையவள் உடலினில் உதித்த
உயரிய கணபதியோ
தன் பேருடல் அசைய வந்தான் (10).

"அண்டம் அவனி எல்லாம்
அன்னை தந்தையுள் தானே ? "
என
விநாயகனும் வினயமாய்க் கேட்க

"வெல்பவன் இவன் தான் " என்றே
மனதினுள் மகிழ்ந்த நாரதர்
" உண்மை அதுவே "
என்று உரத்தே உரைத்தார் அங்கே (11) .

உண்மை இதுவே என
தானே அறிந்த போதும்
ஆன்றோர் உரைத்ததே
உலகிற்கு
சான்றாய்க் கொண்டு (12)

அந்த வேழ முகத்தானும்
தன் திருவடியை சிறு அடியாய்
அடி மேல் அடி வைத்து
மெல்ல நடந்தான் - ஆம்
பழம்
வெல்ல நடந்தான்.
அம்மை அப்பனை
வலம் வந்தான் ,
"ஞாலம் வலம் வந்தேன் " என்றான்.
பழமும் வென்றான். (13)

(தொடரும் .. )

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum