என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
உங்களுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் பொதுவாகவும் நான் பதில் சொல்ல விரும்புகிறேன். உங்கள் மூதாதையர் ஆராதனை செய்த சொந்த கிராம தெய்வம் மற்றும் குலதெய்வத்திற்கு சம்பிரதாய வழிபாடுகளை செய்கிறீர்களா என்று தெரியவில்லை.
அல்லது ஏதாவது நேர்ந்து கொண்டு நிறைவேற்றவில்லையோ என்றும் தெரியவில்லை. நம் வேதங்கள், பூர்வ புண்ணியம் என்று விஷயத்தை வலியுறுத்தி சொல்கின்றன.
இப்போது நிறைய பேர் எங்கேயோ நன்றாக சம்பாதித்து சௌக்கியமாக இருப்பதற்குக் காரணம், நம் முன்னோர்கள் குல தெய்வத்தை ஆராதனை செய்ததே ஆகும்.
அவர்கள், ‘என் வம்சத்தைக் காத்தருள்வாயே’ என்று அந்த தெய்வத்திடம் வேண்டியிருப்பார்கள். அதுவே நாம் நன்றாக இருப்பதற்கு உதவி செய்யும். ஆகவே, எந்த ஊருக்கு சென்றாலும் சொந்த ஊர் தெய்வத்தை மறக்காதீர்கள்.
அந்த தெய்வம், ‘என் பையன் என்னைப் பார்க்க வருவானா’ என்கிற தாய் ஏக்கத்துடன் காத்திருக்கும். அந்த ஏக்கத்தை ஒருமுறையாவது தீர்க்க வேண்டியது நம் கடமை. நீங்கள், இப்போது கட்டியிருக்கும் வீட்டில் கணபதி ஹோமம் செய்யுங்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் கீழ்க்காணும் துர்க்கா ஸ்லோகத்தை 108 முறை சொல்லி, செவ்வரளிப் பூக்களை அர்ச்சகரிடம் கொடுத்து துர்க்கைக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள்.
இதுபோன்று 9 வாரம் செய்து வாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
கட்க சூல கதாதீனி யாநி சாஸ்த்ராணீ தேம்பிகே
கரபல்லவ ஸங்கீனி
தைரஸ்மான் ரக்ஷ ஸர்வத:
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» எனக்கு நிலையான வேலை கிடைக்க, கடன் சுமை தீர, மனைவியின் உடல்நலம் மேம்பட பரிகாரம் தெரிவியுங்கள்...
» என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
» எனக்கு நிலையான வேலை கிடைக்க, கடன் சுமை தீர, மனைவியின் உடல்நலம் மேம்பட பரிகாரம் தெரிவியுங்கள்...
» என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» பட்டப் படிப்பு படித்துள்ள என் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்காமல் தடுமாறுகிறான். நான் பணி ஓய்வு பெற்றவன். மிகுந்த பொருளாதார நெருக்கடி. எங்கள் குடும்பம் முன்னேற பரிகாரம் கூறுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum