தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?

Go down

 எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?  Empty எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?

Post  meenu Fri Feb 01, 2013 12:46 pm

வீட்டில் சுபவிசேஷம் என்றால் சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து விட வேண்டியது அவசியம். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பு, ‘எந்த விக்னமும் வராமல் காப்பாற்று விநாயகனே’ என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

பிள்ளையாரின் திருவடியில் அறுகம்புல் போடுங்கள். நானே கவனித்த சில விஷயங்களைச் சொல்கிறேன். காலை 8 மணிக்கு பூஜை ஆரம்பிக்கலாம் என்றால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் தவிர பிறர் எல்லோரும் என்னவோ தமக்கு சம்பந்தமில்லாததுபோல குளிக்காமல்கூட இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஓரமாக அமர்ந்துகொண்டு டி.வி.யை போட்டு விடுகிறார்கள். நிறையபேர் வந்திருக்கும் நிகழ்ச்சி என்றால், ‘அந்த சொத்துகளை என்ன பண்ணப்போற... என் பங்கு எவ்வளவு?’ என்றெல்லாமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

‘எல்லா பூஜையையும் அம்மா மட்டும்தான் பண்ணுவாங்க. எங்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது’ என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் இருக்காமல், அன்றைய விசேஷத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஒத்துழையாமையாலேயேகூட உங்கள் வீட்டில் இப்படி நிகழலாம்.

கீழேயுள்ள சிவ கவசத்தை தினசரி சூரியன் மறையும் நேரத்தில் சிவன் படத்தின் முன்னால் அமர்ந்து படியுங்கள். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விபூதி இட்டு விடுங்கள்.

பக்குவமாகப் பேசி அவர்களை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துங்கள்.

து:ஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய
துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி
உத்பாததாப விஷபீதிமஸத்க்ரஹார்
வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாதீஸ
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் பூப்படைந்த நாள் முதலே வயிற்று வலியால் வேதனைப்படுகிறேன். எனக்குத் திருமணமாகி மகன் உள்ளான். ஆனாலும் எத்தனை சிகிச்சை செய்தாலும், அந்த நேரத்துக்கு ஏதோ சரியானதுபோல இருக்கிறது; மீண்டும் தொடருகிறது. இந்த நோயிலிருந்து குணமாக என்ன பரிகாரம்?
»  12 வருடங்களாக எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் அடாவடி பேர்வழியினர். கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தும் அவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.
»  எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்து கொண்டேயிருக்கிறது. மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்ன செய்வது?
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum