தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசி: பாலாவின் உண்மை முகம்.

Go down

பரதேசி: பாலாவின் உண்மை முகம். Empty பரதேசி: பாலாவின் உண்மை முகம்.

Post  ishwarya Sat May 25, 2013 1:32 pm

ஒவ்வொரு இயக்குனரும் தங்களது படங்களை உருவாக்குவதில் எவ்வளவு மெனக்கெடுவார்கள் என்பதற்கு இயக்குனர் பாலா சிறந்த உதாரணம். வரும் 15ம் திகதி வெளியாகவுள்ள பாலாவின் பரதேசி படத்தின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. அதர்வா, தன்ஷிகா, வேதிகா இணைந்துள்ள இப்படம், தேயிலை தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை பற்றியது.

இந்நிலையில் பரதேசி படப்பிடிப்பில் பதிவு செய்யப்பட்ட ஒரு டீசர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துமென தெரிகிறது.

பாலாவின் மெனக்கெடல், அவருடைய கோபம், ஒரு கதாப்பாத்திரத்தை வெளிக்கொணரும் விதம் என அனைத்தும் பார்ப்பவர்களை இவர் இப்படியா? என யோசிக்க வைக்கிறது.

மேலும் பரதேசி பற்றிய சில தகவல்கள்

பஞ்சம் பொழைக்கப் போகும் ஒரு கூட்டம், தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிலைப்பாடுகள் தான் பரதேசி என ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலா தெரிவித்திருக்கிறார்.

மேலும் இப்படத்தை பார்த்தால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் டீ குடிக்கவும் யோசிப்பார்கள் என கூறியிருக்கிறார்.

பரதேசி படத்துக்கு பாலா முதலில் வைத்த தலைப்பு 'சனிபகவான்'. இரண்டாவதாக 'கல்லறைத்தோட்டம்' என வைத்தார்கள். இறுதியாகத்தான் ‘பரதேசி’ தலைப்பு உறுதியானது.

இந்தப் படத்தில் அதர்வாவை ஒரு வார்த்தைகூட திட்டவில்லையாம். பலமுறை ரீடேக் வாங்கியபோதும் அமைதியோடு அதர்வாவுக்கு சொல்லிக் கொடுத்தாராம் பாலா.

படம் முழுக்க கோணியையே உடையாக அணிந்து வாழ்ந்திருக்கும் அதர்வா, பாலாவின் நினைவாக அந்த உடையை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் உடன் முதன்முதலாக இணைந்திருக்கும் பாலா, படத்தின் இறுதி வடிவத்தை இளையராஜாவின் ஆசிக்குப் பின்பே பிறரிடம் காட்டும் முடிவில் இருக்கிறாராம்.

இந்த படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து பாலாவிடம் ‘அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள். வெட்கத்தை விட்டு கேட்கிறேன்’ என்று கேட்டிருக்கிறார். ஆகவே, அடுத்த படத்திலும் வைரமுத்துக்கே வாய்ப்பு வழங்க உள்ளாராம் பாலா.

இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச இயக்குனர் சீமானை அழைக்க முடிவு செய்தார் பாலா. ஆனால், என்ன காரணமா தெரியவில்லை. கடைசி நேரத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமெடுத்தபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டாராம் பாலா. படப்பிடிப்பு நடந்த சோத்துப்பாறை ஏரியாவில் உள்ள சுடுகாட்டில் தன்னையும் மறந்து இரண்டு நாட்கள் படுத்து உறங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலா படங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் எடுத்த ஒரே படம் பரதேசிதான். எனவே, தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இதே வேகத்தில் செய்ய முடிவெடுத்திருக்கிறார் பாலா.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum