தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்

Go down

 பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர் Empty பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்

Post  ishwarya Thu May 23, 2013 4:57 pm

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நேற்று கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அதிகார நந்தியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வரும் 24ம் தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. சென்னை மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17 ம் தேதி கோல விழியம்மனுக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. மறுதினம் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் சூரிய வட்டம் மற்றும் சந்திர வட்டம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு அதிகார நந்தி காட்சியளித்தல் நடந்தது.

கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்கள் சூழ அதிகார நந்தியில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகள் வழியே திருவீதியுலா காட்சி நடந்தது. திருக்குளத்தின் பஸ் நிறுத்தம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் பகவான் எழுந்தருளினார். தொடர்ந்து திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதிகார நந்தியில் சுவாமி காட்சியளித்தலுக்காக மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கோயில் தடத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் மாட வீதிகளில் தன்னார்வலர்கள் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் வரும் 24ம் தேதியும், அறுபத்து மூவர் உலா 25ம் தேதியும் நடக்கிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
» கவலை களைவார் கபாலீஸ்வரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum