தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவில் பெண்களில் நிலை

Go down

இந்தியாவில் பெண்களில் நிலை Empty இந்தியாவில் பெண்களில் நிலை

Post  meenu Mon Jan 21, 2013 12:21 pm

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்களின் பாதுகாப்பு பின்தங்கிய நிலையிலே காணப்படுக்கிறது. பெண்களை அடிமைப்படுத்தி வந்த இந்திய சமூகம் பின்னாளில் பெண்களுக்கான உரிமைகள், போராட்டங்கள் என்று பெண் விடுதலை வடிவம் பெற்றவுடன் பெண்களின் முன்னேற்றும் தற்காலத்தில் கணிசமான அளவு அதிகரித்து உள்ளது, பெண்கள் முன்னேறி உள்ள அதே நிலையில் அவர்களின் மீது நடக்கும் குற்ற செயல்களும் அதிகரித்தே காணப்படுக்கிறது.

பெண்ணுரிமைகள் பற்றி மேடை போட்டு பேசினாலும் அது வெறும் வெற்று பேச்சாகவே உள்ளது. நடைமுறையில் பெண்களின் உரிமைகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதெல்லாம் பறிக்கப்படுகிறது. பெண்ணுரிமை பற்றி பேசும் ஆண்கள் கூட வீட்டில் உள்ள பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பது இல்லை என்பதே உண்மை.

பெண் சிசுக்கொலை முதல் ஆரம்பித்து சிறுமிகள் பலாத்காரம், இளவயது பெண்கள் கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை, பெண்களிடம் உரிமை மீறல் என்று ஒரு பெண் குழந்தை முதல் கிழவி ஆகும் வரை அணைத்து பருவங்களிலும் ஏதாவது வகையில் பெண்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது என்னுடைய திடமான கருத்து.

இந்தியாவில் உள்ள பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பாரம்பரியம் மற்றும் பெண்கள் உரிமைகள் சட்டம் மற்றும் பாதுகாப்பு பற்றி அறிவின்மை காரணமாக பல பெண்களுக்கு தங்களின் அடிப்படை உரிமைகள் பற்றிக்கூட அதிகமாக தெரியவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் கடந்த ஆண்டு அதிகமாக அதிகரித்து உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் நகரங்களில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 13 .3 % சதவித குற்ற பதிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும், பெண்கள் அனைவரும் தற்காத்துக்கொள்ள வழிமுறைகள் பயிற்றுவிக்க படவேண்டும்.

பெண்களின் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு பெண் உரிமைகள், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் போன்றவை இந்தியா முழுவதும் அதிகளவில் நடத்தப்பட வேண்டும். பெண்கள் அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்க வகைச்செய்ய வேண்டும்.

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்கிற ஒருவித பயஉணர்வோடு தான் அநேக இந்திய பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெண் நகரத்தில் வேலைக்கு செல்பவளாக இருந்தாலும் சரி இல்லையேல் கிராமபுரத்தில் வயல் வேலைக்கு செல்பவளாக இருந்தாலும் சரி, அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக தான் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum