வேலையில் திடீரென்று சீர்மிகு நிலை பிறழக் காரணம் என்ன?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
வேலையில் திடீரென்று சீர்மிகு நிலை பிறழக் காரணம் என்ன?
: வேலை செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று பைத்தியம் பிடிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படுகிறது. சலிப்பு எல்லாம் இல்லை, சீர்மிகு நிலை என்று சொல்வோமே கொஞ்சம் பிறழ்கிறது. அது எதனால் ஏற்படுகிறது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: செய்து கொண்டிருக்கும் வேலை என்னவென்று பார்க்க வேண்டும். ஏனென்றால் செய்யும் வேலையே தசா புத்திக்கு தகுந்த மாதிரிதான். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு துறைக்கு உரியதாகிறது.
வங்கியில் வேலை செய்கிறார்கள். திடீரென்று பார்த்தால் வி.ஆர்.எஸ். கொடுக்கிறார்கள். குருதான் காசு, பணம், வங்கிக்கெல்லாம் உரிய கிரகம். காசோலை என்று வரும்போது அது சனியாகிறது. அப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு கிரகம் இருக்கிறது.
நீங்கள் ஒரு வேலையில், தொழிலில், வியாபாரத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு மாறுபாடான திசை வருகிறது என்று வைத்துக்கொண்டால், அதாவது நீங்கள் இருக்கும் துறைக்கு, தொழிலிற்கு எதிரான திசை வருகிறதென்றால் அது உங்களுக்கு ஒருவிதமான இயலாமை, ஆற்றாமை, சலிப்பு வரக்கூடும். அப்பொழுதுதான் நாங்கள் என்ன சொல்கிறோமென்றால், துறையை மாற்றுங்கள், வேறு துறைக்குச் செல்லுங்கள், இதில் இருந்தால் வீண் பழி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மென்பொருள் துறையில் வேலை செய்பவர் ஒருவர் வந்திருந்தார். இந்தத் துறையையே விட்டுவிட்டு எம்.பி.ஏ. படித்து ஹெச்.ஆர். ஆக வரப்பாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். தற்பொழுது அவர் எம்.பி.ஏ. முடித்து ஹெச்.ஆர். ஆக இருக்கிறார். மைண்ட் ·பீரியாக இருக்கிறது சார், மென்பொருள் துறையில் இருக்கும் மற்ற இடையூறுகள் கூட இல்லாமல் போய்விட்டது என்று கூறினார். குடும்பத்துடன், மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மனைவியும் என்னைப் பூரணமாக நம்புகிறார் என்று சொன்னார்.
எனவே, இது வேலையைப் பொறுத்ததுதான்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» மிகுந்த பயன் தரும் எலுமிச்சை சாறு
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» மிகுந்த பயன் தரும் எலுமிச்சை சாறு
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» இதயமும், மிகு இரத்த அழுத்தமும்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum