தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோகாசனங்கள் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை...

Go down

யோகாசனங்கள் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை... Empty யோகாசனங்கள் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை...

Post  ishwarya Fri Feb 01, 2013 5:53 pm

1) யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும் .

2 ) யோகாசனம் பயில காலை 5 – 9 மாலை 4 – 8 ஏற்ற நேரமாகும்.

3 ) சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

4) இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு , தலைவலி இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

5) யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக்கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

6) வெறும் தரையில் பயிற்சி செய்யக் கூடாது. பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.

யோகாசனம் பழகுவதால் அடையும் நன்மைகள்:

ஆயுள் அதிகரிக்க செய்கிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடலை அழகாக வைத்துகொள்ள உதவுகிறது.
சோர்வையும் சோம்பலையும் ஒழிக்கிறது.
இதயம், சுவாச உறுப்புகள் வீரியமாக்கிறது.
உடலில் இரத்த ஓட்டத்தை ஒழுங்கு செய்கிறது.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது.

உட்கட்டாசனம் செய்முறை : நேராக நின்று கொண்டு காலை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி கைகளை நேராக நீட்ட வேண்டும். உடல் புராவும் இளக்கமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி பாதி உட்காரிந்த நீலையில் முடிந்த நேரம் நிற்க வேண்டும். கால்முட்டில் லேசாக வலி வரும். அப்போது எழுந்து விட வேண்டும் கால அளவு : 40 - 50 வினாடிகள், இரண்டு முறை செய்யவும்.

பலன்கள்: நாடி நரம்புகள் வலுப்பெறும், அடி வயீறு தொடைபகுதி இளக்கம் கொடுக்கும், கால் முட்டுவலி ,வாதம் நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum