தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்த பத்மாசனம்

Go down

சித்த பத்மாசனம் Empty சித்த பத்மாசனம்

Post  meenu Fri Feb 01, 2013 4:55 pm

தடித்த அதே சமயம் மிருதுவான துணி விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்வது நலம். மஞ்சள் காமாலை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாத காலத்திற்கு பின்னும், உடலில் எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் 6 மாத காலத்திற்கு பின்னும் பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை மாத விடாய் காலத்திலும், கர்ப்பம் தரித்த காலங்களிலும் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

செய்முறை....

முதுகை வளைக்காமல், தலை நிமிர்ந்து அமர்ந்து கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும். வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைக்கவும். இடது கையின் மேல் வலது கையை திறந்த நிலையில் மேல் நோக்கி வைக்கவும். கண்களை மெதுவாக மூடி அதன் பார்வை மையம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். ஒரே சீராக 14 முதல் 16 மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியை காலை 6 மற்றும் மாலை 6 மணியளவில் குறைந்தது 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திக் கொண்டு பயிற்சி செய்வது நலம்.

பலன்....

ரத்த ஓட்டம் சீராக அமையும். மன அமைதி கிடக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum