தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சின் முத்திரை

Go down

சின் முத்திரை Empty சின் முத்திரை

Post  ishwarya Fri Feb 01, 2013 4:33 pm


ஆள்காட்டி விரல்-காற்றையும், நடு விரல்-ஆகாயத்தையும், மோதிர விரல்-நிலத்தையும், சுண்டு விரல்-நீரையும் குறிக்கின்றன. ஐம்பெரும் பூதங்களைத் தன்னகத்தே கொண்ட நம் உடல், இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் சம நிலையை இழக்கிறது, நோய்க்கு ஆளாகிறது. அந்த சமயங்களில் முத்திரைகள் செய்யும்போது சமநிலை இழக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

ஆள்காட்டி விரலை மடக்கி ,கட்டை விரலின் நுனியோடு ஒட்டி ,மற்ற மூன்று விரல்களையும் முன்னோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும். இதனால் கோபம் குறையும், மனம் ஒன்றிணையும் ரத்த அழுத்தம் குறையும், மிக முக்கியமான முத்திரை இது.

தினமும் 15 நிமிடம் வரை செய்யலாம். இதற்காகப் பிரத்தியேக ஆசனங்கள் எதுவும் தேவையில்லை, தரையில் அமர்ந்தோ ,நாற்காலியில் அமர்ந்தோ , அவரவர் வசதியில் அமர்ந்து செய்யலாம். செய்யவேண்டும் என்ற முனைப்பும், பொறுமையும்தான் மிக முக்கியம்.

பயன்கள்....

இதனை தியான முத்திரை என்றும் சொல்லலாம். இது யோக முத்திரை. ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் அழுத்தம் அதிகம் தராமல் சீராக அழுத்தினால் மூளையின் திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் வளரும். படபடப்பு, மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை, தூக்கமின்மை, சோர்வு போன்ற நிலைகள் நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum