அஷ்டபுஜப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
Page 1 of 1
அஷ்டபுஜப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு......
மூலவர் - ஆதிகேசவப்பெருமாள்
தாயார் - அலமேல்மங்கை, பத்மாஸனி
தீர்த்தம் - கஜேந்திர புஷ்கரிணி
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் - காஞ்சிபுரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
பெருமாள் இங்கு அஷ்டபுஜப் பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே ஆதிகேசவப்பெருமாளாக இத்தலத்தில் அருள்பாலித்து வந்திருக்கிறார் என்றும், மங்களாசாஸனத்திற்கு பின் தான் அஷ்டபுஜப்பெருமாள் எனப் பிரபலமானார் என்றும் கூறுவார்கள்.
108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரைத் தனியாக பாடல் பாடி மங்களாசாஸனம் செய்துள்ளனர். இந்தப் பெருமாள், வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார்.
சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பு. பெருமாள் சக்ராக்ருதி விமானத்தின் கீழ் மேற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தலத்துப் பெருமாள் அழித்து அவளைக் காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
போக்குவரத்து வசதி.......
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரம், திருக்கச்சி நம்பிகள் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்வதற்கு பஸ் வசதி உள்ளது. பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.
மூலவர் - ஆதிகேசவப்பெருமாள்
தாயார் - அலமேல்மங்கை, பத்மாஸனி
தீர்த்தம் - கஜேந்திர புஷ்கரிணி
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் - காஞ்சிபுரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
பெருமாள் இங்கு அஷ்டபுஜப் பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே ஆதிகேசவப்பெருமாளாக இத்தலத்தில் அருள்பாலித்து வந்திருக்கிறார் என்றும், மங்களாசாஸனத்திற்கு பின் தான் அஷ்டபுஜப்பெருமாள் எனப் பிரபலமானார் என்றும் கூறுவார்கள்.
108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரைத் தனியாக பாடல் பாடி மங்களாசாஸனம் செய்துள்ளனர். இந்தப் பெருமாள், வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார்.
சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பு. பெருமாள் சக்ராக்ருதி விமானத்தின் கீழ் மேற்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தலத்துப் பெருமாள் அழித்து அவளைக் காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
போக்குவரத்து வசதி.......
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரம், திருக்கச்சி நம்பிகள் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்வதற்கு பஸ் வசதி உள்ளது. பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பச்சைவண்ணப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
» அஷ்டபுஜப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
» அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,
» பச்சைவண்ணப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
» இது காஞ்சிபுரம் ஸ்பெஷல் கோயில் இட்லி
» அஷ்டபுஜப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
» அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,
» பச்சைவண்ணப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
» இது காஞ்சிபுரம் ஸ்பெஷல் கோயில் இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum