தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சைவண்ணப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்

Go down

பச்சைவண்ணப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம் Empty பச்சைவண்ணப்பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்

Post  birundha Sat Mar 30, 2013 8:14 pm

ஸ்தல வரலாறு.....

மூலவர் - பச்சைவண்ணர்
தாயார் - மரகதவல்லி
தீர்த்தம் - சக்கர தீர்த்தம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - காஞ்சிபுரம்

இங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். எனவே, இவரை “பச்சைவண்ணப் பெருமாள்” என்கின்றனர். மரீஷிக்காக, தனியே காட்சி தந்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை. இராமராக காட்சி தந்தவர் என்பதால் இவரை இராமராகவும், தாயாரை சீதையாகவும் எண்ணி வழிபடுகின்றனர்.

புத கிரகத்தின் அபிமான நிறம் பச்சை; அவருக்குரிய அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே பச்சை நிறத்தில் இருக்கும் இவருக்கு பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தாயார் மகாலட்சுமி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.

பெரும்பாலும் தாயார் சன்னதிக்கு முன்புறம் அல்லது அருகில்தான் ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்படும். ஆனால், இங்கு தாயாரின் பீடத்திலேயே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு இராமர் போல காட்சி தந்ததால் இவள்சீதாதேவியாகவும் கருதப்படுகிறாள். இதனால் தாயார் இயந்திர ரூபிணி, மகாலட்சுமி, சீதை ஆகிய மூன்று தாயார்களின் அம்சமாக அருளுகிறாள்.

இத்தலத்தில் மகாவிஷ்ணு இராமராக மரீஷிக்கு காட்சி தந்தபோது, ஆதிசேஷனால் இலட்சுமணனாக மாறமுடியவில்லை. எனவே தன் சுய வடிவத்திலேயே (நாக வடிவம்) இங்கு வந்தார். மகாவிஷ்ணுவிடம் அவரைத் தாங்க தனக்கு வாய்ப்புத் தரும்படி உரிமையுடன் கேட்டார். எனவே, நாகத்தின் தலையின் மீது, பெருமாள் ஜோதியாக காட்சி தந்தார்.

இதன் அடிப்படையில் தாயார் சன்னதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் நாகமாக இருக்க அதன் தலைக்குமேலே ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாக, புத்திர தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் நாகசன்னதியும் இருக்கிறது. பிரம்மா, சரஸ்வதியை அழைக்காமல் யாகம் செய்தபோது அவள் அசுரர்களை அனுப்பி யாகத்தைத் தடை செய்தாள்.

விஷ்ணு, ஜோதியாக நின்று பிரம்மாவின் யாகம் பூர்த்தியடைய உதவினார். அப்போது ஜோதி வடிவில் காட்சி தந்த மகாவிஷ்ணு, இத்தலத்திலும் ஜோதியாக காட்சி தந்திருக்கிறார் என்பது சிறப்பு. இத்தலத்திற்கு நேர் எதிரே திவ்யதேசங்களில் ஒன்றான “பவளவண்ணப் பெருமாள்” தலம் இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் பவளவண்ணரையும், பச்சை நிறப்பெருமாளையும் ஒரே நேரத்தில் வழிபடுவது அபூர்வ தரிசனம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum